பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

சிறப்புச் செய்திகள்...

Loading...

Thursday, September 15, 2011

பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி...!


ஒரு பார்வையில்
ஓராயிரம் பரிமாறல்கள்

உன் உதடுகளின் ஈரத்தில்
என் மனதுக்கு ஆறுதல்

உன் கை தொட்ட நேரத்தில்
என் இதயத்தில் ஜில்லிப்பு

காதோரம் கொடுத்த முத்தத்தில்
என் நெஞ்சமெல்லாம் நெகிழ்ச்சி

நீ நிலவாக சுட்டாய்
நான் சூரியனாக குளிர்ந்தேன்

நேரம் போவதும் தெரியவில்லை
நேசம் உயர்ந்ததும் தெரியவில்லை

பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி
எனக்குள் பேசிக் கொண்டிருக்கிறேன் நான்...

Wednesday, July 6, 2011

ஏழு பிறவியிலும் என்னுடன் வருவாய்…




கண்களை மூடினால்
கனவில் வருகிறாய்….

விழித்துப் பார்த்தால்
எதிரில் நிற்கிறாய்…

பூக்களில் நீயே
புன்னகைக்கிறாய்…

ஒவ்வொரு அணுவிலும்
ஒட்டிக்கொள்கிறாய்…

தொட்டுப்பேசினால்
எட்டிப்போகிறாய்….

தொடாமல் போனால்
வாடிப்போகின்றாய்….

எனைக் கொல்லாமல் கொன்று
நீ இம்சிக்கிறாய் ….

எதிரி என்று உன்னை
எதிர்த்து நிற்கவா?
தோழி என்று
உன் தோளில் சாயவா?

Friday, June 17, 2011

மாற்றங்களை ஏற்றுக் கொண்டால் ஏமாற்றமில்லை!


மகிழ்ச்சியும், துக்கமும் இணைந்ததுதான் வாழ்க்கை. இதனை உணர்ந்து கொள்பவர்களின் பயணம் தெளிந்த நீரோடையாக நகர்ந்து கொண்டிருக்கும். ஆனால் எதற்கெடுத்தாலும் கண்டிசன் போடும் இன்றைய இளம் தலைமுறையினர்தான் செய்வதறியாது தடுமாறி நிற்கின்றனர். ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் இருக்கிறது வாழ்க்கைக்கான வெற்றியின் ரகசியம்.

புனிதமான பந்தம்

சீர்வரிசையும், வரதட்சணையும் கொடுத்துதான் திருமணம் நடைபெறுகிறது என்றாலும் இது பண்டமாற்று வியாபாரமல்ல. புனிதமான உறவின் தொடக்கம் என்பதை இருவருமே புரிந்து கொள்ள வேண்டும். எல்லோருக்குமே ஆசைகள், லட்சியங்கள் இருப்பது போல நம்மை திருமணம் செய்துகொண்டவருக்கும் கனவுகள் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. அதனை சிதைத்து விடவும் கூடாது. திருமணத்திற்கு முன்பே சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்வதில் எந்தவித தவறும் இல்லை.

எல்லையற்ற அன்பு

வாழ்க்கைத்துணையை கரம் பற்றிய நிமிடத்திலேயே இருவரும் ஒருவருக்கொருவர் சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும். எந்த சூழ்நிலையிலும் உன்னைக் கைவிட மாட்டேன் என்ற உறுதிமொழியே தடுமாற்றம் இன்றி பயணம் செல்ல வழிவகுக்கும்.

மகிழ்ச்சியுடன் தொடங்கும் மணவாழ்க்கை இறுதி வரை சந்தோஷமாக இருப்பது என்பது மணமக்களின் கைகளில்தான் உள்ளது. வெவ்வேறு பழக்க வழக்கங்கள் உள்ள குடும்ப சூழ்நிலையில் இருந்து வந்திருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து எல்லையற்ற அன்பு பாராட்டுங்கள்.

நம்பிக்கைதான் எல்லாமே

மணவாழ்க்கையில் ஒன்றாக இணைந்த இருவருமே ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் வாழத் தொடங்கவேண்டும். ஏனென்றால் நம்பிக்கைதான் வாழ்க்கையின் அச்சாணி. தாம்பத்யத்தில் இருவரின் உடலும் சங்கமிப்பது போல லட்சியப்பயணத்தில் தடையாக நில்லாமல் துணையாக இருப்பது அவசியம். அதுவே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அஸ்திவாரம்.

யாதார்த்தமாய் வாழுங்கள்

சிக்கல்கள், சிரமங்கள், சவால்கள் போன்ற வாழ்வியல் யதார்த்தங்களை புரிந்து கொண்டால் அவற்றை எளிதாக எதிர்கொள்ளலாம். வாழ்வு முழுவதும் வசந்தமாகும் குடும்ப வாழ்க்கை.சின்னச்சின்ன விஷயங்களை பெரிதுபடுத்தாமல் சிக்கல்களை தீர்ப்பதில் மட்டுமே திறமையை காட்ட வேண்டும்.

சிறு சிறு கருத்து வேற்றுமையின்போது தவறுகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தால் எல்லாம் பூதாகரமாகத் தோன்றும். தடுமாற வைத்துவிடும். இல்லறத்தில் காலம் முழுக்க இணைந்திருப்பேன்’ என்று உறுதி ஏற்று செயல்பட்டால் அன்பும், விட்டுக்கொடுத்தலும் இயல்பாக வந்துவிடும்.

அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்

திருமணம் முடிந்ததும் கணவனோ, மனைவியோ இருவருமே ஒருவரைப் பற்றி ஒருவர் ஆராயத் தொடங்கக் கூடாது. ஏனென்றால் உறவுப்பாலம் சிதைவதற்கான முதல் வித்து இதில்தான் தொடங்குகிறது.

இருவருமே வெவ்வேறு சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதால் அவரவரின் குறை நிறைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். யாரும் யாருக்காகவும் மாறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. காலச் சூழலில் சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரும். மகிழ்ச்சி குடியேறும்.

Saturday, May 21, 2011

பனையோலை காத்தாடி



நெருப்பு பொறி பறக்கும்
அக்னி வெய்யில்…

அனலுக்கு இதமாக
பதநீருடன் நுங்கு சேர்த்து
போட்டி போட்டு
பருகிய காலங்கள்…

பனங்காயை கோர்த்து
வண்டியோட்டிய
மழலைப் பருவம்…

பனையோலையோடு
சோளத்தட்டை சேர்த்து
காத்தாடியாக்கிய
விடலைப் பருவம் என...

பழையவை எல்லாம்
அவ்வப்போது அவசரமாய்
நினைவில் எட்டிப்பார்க்கும்…

வயற்காட்டு வேலியில்
அமர்ந்த தட்டானைப் பிடித்து
வாலில் நூல்கட்டி
விளையாடிய
பொழுதுகள் மட்டும்
இன்றைக்கும் அழியாமல்
நினைவில் நிற்கும்

Saturday, April 9, 2011

யாதுமாகி நின்றாய் நீ...!


காணும் இடமெங்கும்
காட்சியாகின்றாய் !

கண்களை மூடினால்
கனவாகின்றாய் !

காற்றாய் வந்து என்
சுவாசமாகின்றாய் !

பேசும் பாஷை எல்லாம்
வார்த்தையாகின்றாய் !

கேட்கும் ஒலிகள் எங்கும்
குரலாகின்றாய் !

என் இதயத்துடிப்பின்
ஓசையாகின்றாய் !

நரம்பினுள் சென்றாடும்
உதிரமாகின்றனாய் !

உதிரத்தில் கலந்து
அணுக்கள் ஆகின்றாய் !

என் இனியவனே
எல்லாமுமாய் மாறி

எனை இயக்கும்
சக்தியாகின்றாய் நீ.

காதலில் வெற்றி பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்


காதல் என்பது இளமையின் வசந்தகாலம். எல்லோருமே ஏதாவது ஒரு கால கட்டத்தில் காதலை கடந்து வந்திருப்பார்கள். எல்லா காதலுமே வெற்றி கரமாக திருமணத்தில் முடிந்திருக்க வாய்ப்பில்லை. சின்ன சின்ன விசயங்கள்தான் பூதாகரமாக மாறி தோல்விக்கு அடிகோலியிருக்கும்.


காதலில் வெற்றி பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஜெயித்த காதலர்கள் சிலர் கூறிய விசயங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம். இப்போது காதலிப்பவர்கள் இவற்றை பின்பற்றலாம்.

- காதல‌‌ர்க‌‌ளி‌ல் இரு வகை உ‌ண்டு, பெரு‌ம்பாலு‌ம் பே‌சி‌ப் பழ‌கிய‌ப் ‌பி‌ன்னரே காதல‌ர்களாக ஆவது‌ம், பா‌ர்‌த்த மா‌த்‌திர‌த்‌‌திலேயே காத‌ல் உ‌ண்டா‌கி காதலை‌த் தெ‌ரி‌வி‌த்த ‌பி‌ன் காதல‌ர்களானவ‌ர்களு‌ம் உ‌ண்டு.இ‌தி‌ல் எ‌ந்த வகையாக இரு‌ந்தாலு‌ம், காதல‌ர்க‌ள் ‌சில அடி‌ப்படையான ‌விஷய‌ங்க‌ளி‌ல் அ‌திக கவன‌ம் செலு‌த்த வே‌ண்டு‌ம்.

- காத‌ல் ம‌ற்றவ‌ர்களு‌க்கு வே‌ண்டுமானா‌ல் தெ‌ரியாம‌ல் இரு‌க்கலா‌ம். ஆனா‌ல் காத‌லி‌‌ப்பவரு‌க்கு தெ‌ரியாம‌ல் இரு‌க்க‌க் கூடாது. காதலை மறை‌ப்ப‌தி‌ல் எ‌ந்த பயனு‌ம் இ‌ல்லை. தை‌ரியமாக வெ‌ளி‌ப்படு‌த்‌தினா‌ல் ம‌ட்டு‌ம் ‌நீ‌ங்க‌ள் காதலராக முடியு‌ம்.

- உ‌ங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் எ‌ல்லா‌ம் மா‌ய்‌ந்து மா‌ய்‌ந்து ‌நீ‌ங்க‌ள் காத‌லி‌ப்பதை தெ‌ரி‌வி‌ப்பதை ‌விட ஒரு ‌நி‌மிட‌ம் தை‌ரியமாக‌ச் செ‌ன்று ‌நீங்கள் காதலிப்பவரிடம் உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள்.

- காத‌லி‌ப்பவ‌ரிட‌ம் அடி‌க்கடி உ‌ங்களது காதலை தெ‌ரி‌வியு‌‌ங்க‌ள். அது வா‌ர்‌த்தையாகவு‌ம் இரு‌க்கலா‌ம். வா‌ழ்‌த்து அ‌ட்டையாகவு‌ம் இரு‌க்கலா‌ம். பூ‌‌க்களு‌ம் உ‌ங்க‌ள் காதலை‌ச் சொ‌ல்லு‌ம்.

- எதை வேண்டுமென்றாலும் மறக்காலம் காதலிப்பவரின் பிறந்தநாளை மட்டும் மறக்கக்கூடாது. துணையுடன் இணைந்து சிறப்பாக கொண்டாடுங்கள். பிறந்தநாள் நினைவில் இல்லாதது போல இருந்துவிட்டு பின்னர் பரிசு கொடுத்து அசத்தலாம்.

- ஈகோ மனப்பான்மை இருக்கக்கூடாது. இதுதான் காதலர்கள் பிரிவதற்கு முக்கிய காரணியாக உள்ளது.

- காதல‌‌ர்க‌ள் எ‌ங்கு செ‌ன்றாலு‌ம் இருவரது பாதுகா‌ப்பையு‌ம் க‌ரு‌த்‌தி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள். செ‌ல்லு‌ம் இடமு‌ம், போ‌ய் வரு‌ம் நேரமு‌ம் பாதுகா‌ப்பானதாக இரு‌க்கு‌ம் வகை‌யி‌ல் அமையு‌ம் படி ‌தி‌ட்ட‌மிடு‌ங்க‌ள்.

குறைகளை பட்டியல் இடாதீர்கள்

- உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரி‌ந்தவ‌ர்க‌ளிட‌ம் எ‌ல்லா‌ம் காதல‌ரி‌ன் குறைக‌ளை‌க் கூ‌றி‌க் கொ‌ண்டிரு‌க்க வே‌ண்டா‌ம்.

- காத‌லி‌ப்பவ‌ரி‌‌ன் குணா‌திசய‌ங்களை மா‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்று நிினை‌க்கா‌தீ‌ர்க‌ள். அதனை ஏ‌ற்று‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். ‌மிகவு‌ம் தவறான செயலாக இரு‌‌ந்தா‌ல் ம‌ட்டு‌ம் அதனை எடு‌த்து‌க் கூ‌றி அவரு‌க்கு உண‌ர்‌த்து‌ங்க‌ள்.

- கரு‌த்து வேறுபாடு ஏ‌ற்படு‌ம்போதெ‌ல்லா‌ம் காதல‌ரிட‌ம் இரு‌க்கு‌ம் குறைகளை‌ப் ப‌‌ட்டிய‌லிடா‌தீ‌ர்க‌ள். அத‌‌ற்கு ப‌திலாக அவ‌ரிட‌ம் இரு‌க்கு‌ம் ‌ந‌ற் குண‌ங்களை‌ எடு‌த்து‌க் கூ‌றி இ‌ப்படி‌ப்ப‌ட்ட ‌நீ‌ங்களா இதை‌ச் சொ‌ன்‌னீ‌ர்க‌ள் அ‌ல்லது செ‌ய்‌தீ‌ர்க‌ள் எ‌ன்று கூ‌றினா‌ல் ச‌ற்று மேலாக இரு‌க்கு‌ம்.

- காதலரை ‌விட ‌‌நீ‌ங்க‌ள் உய‌ர்‌ந்தவ‌ர் எ‌ன்ற அடி‌ப்படை‌யி‌ல் எ‌ந்த பே‌ச்சு‌ம் இரு‌க்க‌க் கூடாது. இருவரு‌ம் ஒரே உ‌யி‌ர் எ‌ன்பது போ‌ன்று‌ம், ஒருவரை ஒருவ‌ர் ந‌ம்‌பி வா‌ழ்வது போ‌ன்று‌ம் உ‌ங்க‌ள் பே‌ச்சு இரு‌க்க‌ட்டு‌ம். ம‌ற்றவ‌ர்களை‌ப் ப‌ற்‌றிய அடி‌க்கடி காத‌லி‌ப்பவ‌ரிட‌ம் பே‌சி‌க் கொ‌ண்டு இரு‌ந்தா‌ல் அவ‌ர்களு‌க்கு ச‌‌லி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம்.

- ரகசியம் காப்பது காதலில் மிகவும் முக்கியம். காதலர்களுக்குள் இருக்கும் ரகசியங்கள் அவர்களுக்கு மட்டும் தெரிந்தவையாக இருக்கவேண்டும்.

இப்படி இன்னும் இன்னும் நிறைய. அத்தனையையும் பின்பற்ற முடியாவிட்டாலும் கூட நச்சென்று நாலை கையில் எடுத்தால் இனிமையான காதல் உங்கள் வசமாகும்.

Friday, April 8, 2011

இல்லறத்தில் இன்பம் பொங்க, சந்தோசமாய் வாழ சின்ன சின்ன டிப்ஸ்


விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்று ஒரு அழகான பழமொழி உண்டு. இது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது.


திருமணமான புதிதில் வாழ்க்கை எல்லோருக்குமே இனிக்கத்தான் செய்கிறது. சில வருடங்களில் வாழ்க்கை கசந்து மணமுறிவு வரை சென்றுவிடுகிறது.

நம்மில் எத்தனை பேர் இன்பமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று கேட்டால் யாருமே சரியான பதிலை கூற முடியாது. முன்னோர்கள் கூறியுள்ள சில எளிய வழிகளை பின்பற்றினாலே இல்லறம் இனிக்கும்.

விட்டுக்கொடுங்கள்

ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழப்பழகினால் கசப்புணர்வு தோன்ற வாய்ப்பு இல்லை. ஒருவரின் விருப்பத்தை மற்றவர் அலட்சியப்படுத்தாதீர்கள். ரசனைகள் ரசிக்கத்தான். ரகளைக்கல்ல.

நம்முடைய வாழ்க்கைத்துணையை நாம் தான் உயர்த்திப் பேச வேண்டும். அழகு, அறிவு, பொருளாதாரம் எதுவாகிலும் மற்றவர்களுடன் குறிப்பாக அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். இதுதான் விரிசலுக்கான முதல் விதை.

அன்பை பரிமாறுங்கள்

பிறர் முன்னால் கடுமையான வார்த்தைக்களைப் பேசி காயப்படுத்தாதீர்கள். அன்பான வார்த்தைகளை மட்டுமே உபயோகிங்கள். சந்தோசமான தருணங்களில் மட்டுமல்லாது சங்கடமான தருணங்களிலும் அன்புதான் வாழ்க்கையின் ருசியை உணர்த்தும் மந்திரம்.

நிறைய பேசுங்கள். ஒருவர் மட்டுமே பேசி போரடிக்காமல் மற்றவர் பேசுவதையும் காது கொடுத்து கேளுங்கள்.

முடிந்த வரை இருவருமே சேர்ந்து சாப்பிடுங்கள். அட்லீஸ்ட் டின்னர் மட்டுமாவது சேர்ந்து உணவருந்துங்கள்.

வயதாகிவிட்டது என்று வருத்தப்படாமல் அழகில் கவனம் செலுத்துங்கள்.

பிறந்தநாள், திருமணநாள் ஆகியவற்றை நினைவில் வைத்து சின்ன சின்ன பரிசுகளை தருவது நேசத்தை அதிகரிக்கும்.

சமாதானம் ஆகுங்கள்

எந்த நேரத்தில் சண்டை போட்டாலும் பரவாயில்லை, படுக்கையறைக்குள் சண்டையை அனுமதிக்காதீர்கள். அங்கு செல்லும் முன் சமாதானமாகி விடுவது நலம்.

எதுவென்றாலும் முதல் சாய்ஸ் உங்கள் இல்லத்துணைக்குத்தான். பிறகு தான் குழந்தைகள், உறவினர்கள்.

தினமும் இரவில் பொதுவாக மனம் விட்டுப்பேசுங்கள். ஒருவருக்கொருவர் ஐ லவ் யூ சொல்லிக்கொள்ளுங்கள். பிறகு பாருங்கள் இந்த மந்திர வார்த்தையின் மகிமையை.

எதுவென்றாலும் முதல் சாய்ஸ் உங்கள் இல்லத்துணைக்குத்தான். பிறகு தான் குழந்தைகள், உறவினர்கள்.

இந்த ஐடியாவை பின்பற்றி பாருங்க இல்லறம் நல்லறமாய் இனிக்கும்

Thursday, April 7, 2011

காதல் 'தேடுதலை' முடித்த 'தேவதை'களைக் கண்டுபிடிப்பது எப்படி?

பெண்களின் மனதைக் கடலின் ஆழத்திற்கு ஒப்பிடுவார்கள். பெண்களின் மனதில் உள்ளதை அறியவே முடியாது என்பது அதற்கு அர்த்தம். ஆனால் அதையும் தாண்டி, காதலில் விழுந்த பெண்களைக் கண்டுபிடிக்கவும் சில வழிகள் உள்ளன. அந்தப் பெண்களே தங்களையும் அறியாமல் அதை வெளிப்படுத்துவார்கள். அதை வைத்து அவர்கள் என்ன மன நிலையில் உள்ளனர் என்பதை அறியலாம்.


இதோ காதலில் விழுந்த பெண்களைக் கண்டறிய சில வழிகள்...

- ஒழுங்காய் பவுடர் மட்டும் பூசிக் கொண்டு இருந்த பெண், பெர்ஃப்யூமைஉபயோகிக்க ஆரம்பிக்கிறாள் என்றால், அதுவும் அந்த பெர்ஃப்யூமில் ரோஸ் கோட்டட் பெர்ஃப்யூமை தேடிப் பிடித்து வாங்குவதாக இருந்தால் புரிந்து கொள்ள வேண்டியதுதான்.

- தொலைக்காட்சி, எப்.எம் எதுவென்றாலும் அதில் காதல் பாடல் மட்டுமே கேட்கப் பிடிக்கும்.

- காதில் கம்மல் இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் செல்போன் இருக்கும். அவளது அனைத்து இன்கம்மிங்கிற்கும் பாடல் இருக்கும். ஆனால் யாரோ ஒருவர் அழைப்பிற்கு மட்டும் வைப்ரேசன் இருக்கும். அதுதான் 'காதல் வைப்ரேஷன்'. அந்த அழைப்பு வந்த உடன் சொல்லுப்பா என்று ஆரம்பித்து பேசிக் கொண்டிருப்பார்கள். செல்லுப்பா என்று செல்போன் கம்பெனி காரர்கள் கூறும் வரை பேசிக் கொண்டிருப்பார்கள்.

- வார இதழ்களைப் படித்தவர்கள், அதில் செய்திகளை விட்டு விட்டு கவிதைகளாய் தேடிப் பிடித்துப் படிக்கிறார்கள் என்றால் நிச்சயம் அவர் இதயத்தை எங்கேயோ மிஸ் செய்த 'மிஸ்' என்று கருதிக் கொள்ளலாம்.

- தொலைபேசியில் ஊருக்கே கேட்கும் விதமாய் பேசுவாள், ஆனால் சில நேரங்களில் தனக்கே கேட்காதவாறு ஹஸ்கி வாய்சில் பேச ஆரம்பித்தால் அது ஒரு நல்ல 'தொடக்கம்'.

- சின்னவயதிலிருந்து மஞ்சள் தேய்த்து குளிக்கும் பெண் கொஞ்ச நாளா மஞ்சள் தேய்த்து குளிக்கலைன்னா புரிஞ்சுக்கலாம் பொண்ணு எங்கேயோ 'லாக்' ஆயிடுச்சுன்னு.

- அடிக்கடி ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பாள். அது நிச்சயம் காதல் பாடலாய்தான் இருக்கும் என்பதை சொல்லத் தேவை இல்லை.

- பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்த்த மாதிரி, கண்ணாடியவே முறைச்சி முறைச்சி பார்ப்பாங்க. அப்படின்னா அவர்கள் காதல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

- பசங்களுக்கு சில சமயம் டவுட் வரும். இந்தப் பெண் நம்மை காதலிக்கறாளா இல்லையா என்று? கவலையே படாதீங்க. அதுக்கும் ஒரு வழி இருக்கு. யாருமே சிரிக்காத மொக்கை ஜோக்கை அவங்ககிட்ட சொல்லுங்க. விழுந்து விழுந்து சிரிச்சாங்கன்னா அவங்க உங்க வலையில விழுந்துட்டாங்கன்னு அர்த்தம்.

- "வானம் எவ்ளோ அழகா இருக்கு இல்லை. இந்த கடலோட அலை சத்தம் எவ்ளோ ரம்மியமா இருக்கு இல்லை" என்று இயற்கையை ரசித்து வர்ணிப்பாங்க. அப்படியானால் அவர்கள் யாரையோ ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று அர்த்தம்.

- வார்த்தைகளே வராமல் ம்ம்ம்ம்.. அப்புறம்... என்று உங்களிடம் பேச ஆரம்பித்தால், அவங்களுக்குள்ள "பல்ப்" எரிய ஆரம்பிச்சுடுச்சு, எதிர்முனையில் 'பியூஸ்' போயிடுச்சுன்னு அர்த்தம். சாப்பிட்டியா என்று நீங்கள் கேட்டால் கூட முதலில் காரணமே இல்லாமல் சிரித்துவிட்டு.. அப்புறம்தான் பதில் வரும்..

காதல் 'தேடுதலை' முடித்து விட்ட 'தேவதை'களின் இலக்கணங்களை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...!

Saturday, December 4, 2010

நித்யா தப்ப முடியாது!


எப்படியாவது கர்நாடக சி.ஐ.டி.யின் எஸ்.பி. யோகப்பாவையும் டி.ஐ.ஜி. சரண் ரெட்டியையும் மடக்கிவிடவேண்டும் என்று கடைசி வரை முயற்சித்துப் பார்த்து நித்யானந்தர் தரப்பு. வெயிட்டான சூட்கேஸ்களுடன் பிடதி ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் சுற்றிக் கொண்டிருந்தார்கள். நித்யானந்தர் மீதான வழக்கை குவாஷ் செய்துவிடவேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை முயற்சிகளும். ஆனால், அவர்களின் அத் தனை வலையிலும் சிக்காமல், ராம்நகர் நீதிமன் றத்தில் நித்யானந்தா உள்ளிட்ட 5 பேர் மீது சார்ஜ் ஷீட் செய்துவிட்டது கர்நாடக சி.ஐ.டி.

லெனின் கருப்பன் என்கிற லெனின் தர் மானந்தா ரகசியமாக எடுத்த நித்யானந்தர்- ரஞ்சிதா படுக்கையறை வீடியோ காட்சிகள் நமது நக்கீரனிலும் தொலைக்காட்சி சேனல்களிலும் வெளியான போது, சாமியார் போர்வையில் இருந்த நித்யானந்தாவின் உண்மை முகம் உலகத்திற்குத் தெரிய வந்தது. அவரது ஆசிரமத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் கொடுமைகள் பற்றிய தகவல்களும் வெளியாக, தமிழக போலீஸ்தான் முதலில் எஃப்.ஐ.ஆர். போட்டது. பிறகு, பிடதி ஆசிரமம் மைசூர் அருகே அமைந்திருப்பதால் கர்நாடக போலீசுக்கு வழக்கு மாற்றமானது. கர்நாடக போலீசார் இதில் மெத்தனம் காட்டிவந்த நிலையில் தான், கர்நாடக சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது.

தலைமறைவாக இருந்த நித்யானந்தாவின் செல்போன் பேச்சுகள் ட்ரேஸ் செய்யப்பட்டதில் அவர், இமாச்சலப் பிரதேசத் தில் இருப்பது தெரியவர, அங்கே சென்று கைது செய்தது சி.ஐ.டி. 53 நாள் சிறையிலிருந்த நித்யானந்தா, விசாரணை நேரத்தில் டிரா மா போட முயன்றபோது, போலீசார் தங்கள் பாணியில் சில போடு களைப் போட்டு உண்மைகளை வெளியே கொண்டுவந்தனர்.

தன் மீது சார்ஜ் ஷீட் போடுவதற்குள் வழக்கை குவாஷ் செய்துவிடவேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா வழக்குப் போட்டார். இந்த வழக்கை முதலில் ஒரு நீதிபதி மற்றொரு நீதிபதிக்குப் பரிந்துரைக்க, அவரும் விசாரிக்க மறுத்து, வேறொருவருக்கு அனுப்ப, இப்படி 3 நீதிபதிகளிடம் மாறியது இந்த வழக்கு. கடந்த 29-ந் தேதியன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சி.ஐ.டி. தரப்பில் ஆஜரான அரசு வக்கீல், 27-ந் தேதியே சார்ஜ்ஷீட் போடப்பட்டுவிட்டது என்று பதிலளிக்க அத்தனை பேருக்கும் ஷாக். வழக்கை குவாஷ் செய்வது தொடர்பான பெட்டிஷன் விசாரணையில் உள்ள நிலையில் எப்படி சார்ஜ் ஷீட் போடப்பட்டது என்ற கேள்வி முன்வைக்கப்பட, நித்தியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் வாக்குமூலம் கொடுத்திருப்பதையும் தெரிவித்தது சி.ஐ.டி தரப்பு. எந்தப் பெண்ணுமே புகார் கொடுக்கவில்லை என நித்யானந்தா தரப்பு தங்களுக்கு ஆதரவான ஊடகங்கள் வாயிலாகப் பிரச்சாரத்தை வேகப்படுத்திப் பார்க்கிறது.

நித்யானந்தாவால் பாதிக்கப்பட்ட ஒரு வெளி நாடு வாழ் பெண்மணி, கர்நாடகாவுக்கே நேரில் வந்து, தனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி சி.ஐ.டி. போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். மெடிக்கல் டெஸ்ட்டிலும் அவர் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப் பட்டிருக்கிறது.

அந்தப் பெண் அளித்துள்ள புகாரில், ""நானும் என் கணவரும் நித்யானந்தரின் ஆசி ரமத்திற்கு வந்தோம். என் கணவர் வெளிநாட் டுக்குத் திரும்பிவிட்டார். நான் நித்யானந்தரின் போதனைகளால் ஆசிரமத்தில் இருந்தேன். "தான்தான் சிவன், கிருஷ்ணன் என்றும் நான்தான் பார்வதி' என்றும் அவர் வர்ணிப்பார். தான் சொல்கிறபடி நடந்துகொண்டால் ஆன்மீக உலகத்தில் உயர்ந்த இடம் கிடைக் கும் என்று சொல்வார். அவரது போதனை களில் மயங்கிய என்னை அவர் பயன்படுத்திக் கொண்டார். அவரோட 4 பேரும் அந்த ஆசி ரமத்தில் துணையிருந்தார்கள்'' என்று அந்த வாக்குமூலத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில்தான், நித்யானந்தாவுடன் பக்தா னந்தா, சச்சிதானந்தா, சதா னந்தா, ராகினி ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்தப்பெண் தனது வாக்குமூலத்தில், ""கும்பமேளா வுக்கு புனித நீராடப் போன போதுகூட அவர் விடவில்லை. இதுதான் கடவுளை அடையும் வழி என்றும், இதுதான் பக்தி மார்க்கம், இந்த உறவு ரொம்பவும் புனிதம் என்றபடி யும் கட்டிப் பிடித் தார். உடம்பெல் லாம் சேறும் சகதி யுமாக இருந்த நிலையில் இப் படி செய்கிறாரே என்று தடுத்துப் பார்த்தேன். இது வும் சுகம்தான் என்று சொல்லி என்னை படாத பாடு படுத்தினார்'' என்று சொல்லியிருக்கிறார். ஆசிரமத்தில் இருந்த ஒரு பையனும் தன்னை நித்யானந்தா ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தியது பற்றி சொல்லி யிருக்கிறார்.

வலுவான வாக்குமூலங்கள் கிடைத்திருக்கும் நிலையில், நித்யானந்தா மீது என்ன ஆக்ஷன் எடுக்கப்படும் என்று சி.ஐ.டி. வட்டாரத்தில் நாம் கேட்டபோது, ""இது கல்ட் ஆக்ஷன் என்ற வகையில் சேர்கிறது. அதாவது, திட்டமிட்டே ஒரு கும்பலாக இப்படி செயல்பட்டிருக்கிறார்கள் என்பது தண்டனைக்குரிய குற்றமாகும்'' என் கின்றனர்.

நித்யானந்தா மீது முதலில் புகார் கொடுத்த லெனின் தர்மானந்தா நம்மிடம், ""நான் நக்கீரனில் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நித்யானந்தா மோசமான ஆள் என்று எனக்கு முதலில் தெரிந்தது 2007ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் நாள். இந்த 2010-ல் அதே நவம்பர் 27-ந் தேதிதான் அவர் மீது சார்ஜ் ஷீட் போடப்பட்டிருக்கிறது. பலபேர் வாழ்க்கையில் விளையாடிய அவர் தப்பிக்கவே முடியாது'' என்கிறார் உறுதியான குரலில்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை எதிர்த்து நித்யானந்தா தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட, குவாஷ் பெட்டிஷன் மீதான விசாரணை வரும் 7-ந் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் இறுக்கமான பிடிக்குள் நித்யானந்தாவும் அவரது ஆட்களும் சிக்கியுள்ள நிலையில், நித்திக்கு ஆதரவாக ரத்தக் கையெழுத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் வேலையில் ஆசிரமத் தரப்புத் தீவிரமாகியுள்ளது.

"மகனின் அரசியல் வியூகம்" விஜய் அப்பா பேட்டி!


ஜனவரியில் அதிரடி பண்ணப்போறாரு விஜய். கட்சிக்கு பேரெல்லாம் ரெடிபண்ணியாச்சு... என உற்சாகத்தில் இருக்கிறார்கள் விஜய்யின் ரசிகர் மன்றத்தினர். கடந்த 28ந்தேதி சென்னை வடபழநியில் உள்ள விஜய்யின் ஜெ.எஸ்.கல்யாணமண்டபத்தில் ரசிகர் மன்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

தமிழகம் முழுவதிலிருந்தும் மாவட்ட, ஒன்றிய மற்றும் மகளிரணியின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். ஒவ்வொரு நிர்வாகிகளின் மனசிலும் என்ன இருக் கிறது என்பதை தெரிந்துகொள்வதற்காக விஜய்யும், எஸ்.ஏ.சந்திரசேகரனும் ஒவ் வொருவரையும் தனித்தனியே அழைத்து பேசினார்கள். இதனால் ஞாயிறு காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை மறுநாள் அதிகாலை 2.30 மணிவரை... கிட்டத்தட்ட 17மணி நேரம் நடந்திருக் கிறது. இந்த ரகசிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலரிடம் பேசினோம்.

"" "தை பொறந்தா வழி பொறக்கும்'னு சொல்லுவாங்க. எங்களுக்கும் தையில் அரசியல் வழி பொறக்கும்கிறது நிச்சயமாகிருச்சு. எங்க ஒவ்வொருத்தரை யும் தனித்தனியே கூப்பிட்டு கருத்துக் கேட்டாரு தலைவர். எல்லா நிர்வாகிகளும் சொன்ன ஒரு விஷயம் 2011 தேர்தலில் பங்கேற்பது குறித்துத்தான். மூன்று விதமான கோரிக்கை களை நாங்கள் தலைவர்கிட்ட வச்சோம். அரசியல் கட்சியை உடனே தொடங்கணும். அது உடனடியா சாத்தியப் படாதுன்னா.... கூட்டணியில் இடம்பெறணும். அதுவும் இப் போதைக்கு முடியாதுன்னா... யாருக்கு வாக்களிக்கணும்னு நீங்க வாய்ஸ் கொடுக்கணும்னு சொன்னோம். எம்.ஜி.ஆருக்குப் பிறகு மக்கள் செல்வாக்குள்ள நடிகர் ரஜினி, விஜயகாந்த்தைவிட விஜய்தான்னு போனவருஷம் லயோலா கல்லூரி எடுத்திருந்த சர்வே முடிவுகளையும் விஜய்யிடம் காட்டினோம்.

பத்து சதவிகித நிர்வாகிகள் தி.மு.க.வோடு கூட்டணினும், 90 சதவிகித நிர்வாகிகள் அ.தி.மு.க.வோடு கூட்டணினும் சொன்னாங்க. அதுக்கு விஜய்... "எல்லா கட்சி களைச் சேர்ந்தவங் களும் என்னோட மன்றத்தில இருக் கீங்க. ஏதாவது ஒரு கட்சியோட கூட் டணினு சொன் னா... மன்ற நிர்வாகி களுக்கு தேவையில் லாம மனவருத்தம் வருமே?'னு சொன் னாரு. ‘அரசியல்ல நீங்க எறங்கீட்டா நாங்க எங்க ளோட கட்சிகள்ல இருந்து விலகிடுவோம். அதனால் துணிஞ்சு முடிவெடுங்க தலைவா'னு ஒட்டுமொத்த நிர்வாகிகளுமே சொன்னோம்.


"உங்க எதிர்பார்ப்பு வீண்போகாது. ஜனவரியில் நல்ல செய்தி நிச்சயம் உண்டு'னு நம்பிக்கை டானிக் கொடுத்துட்டார் தலைவர். கட்சிக்கு "மக்கள் சக்தி', "மக்களாட்சி பேரவை', "மக்கள் இயக்கம்'னு சில பெயர்கள் கூட பரிசீலனையில் இருக்கு. உலக அரசியல் தலைவர்கள், இந்திய அரசியல் தலைவர்கள், அரசியலமைப்புச் சட்டம்... இப்படி அரசியல் சார்ந்த புத்தகங்களை தலைவர் தீவிரமா படிச்சிட்டு இருக்காரு. அவரோட கார்ல இப்படிப்பட்ட புத்தகங்கள் இருக்குது. எங்களையும் படிக்கச் சொல்லீருக்காரு. விவசாயிகளை மதிக்கணும்கிறத அடிக்கடி சொல்றாரு. "உண்மையான ஜனநாயகத்தை ஒவ்வொரு மனுஷனும் அனுபவிக்கணும். அதுதான் நம்ம அமைப்போட நோக்கம்'னு சொல்லீருக்காரு'' என விபரம் சொன்னார்கள் நிர்வாகிகள்.

விஜய் மன்றத்தை அரசியல் சக்தியாக மாற்றுவதில் முக்கிய பங்காற்றி வரும் அவர் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் இதுபற்றி கேட்டோம்.

""விஜய் ரசிகர்களை சினிமா ரசிகர்களாகவே வைத்திருக்காமல் அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் இருக்கிறார் விஜய். ஏற்கனவே மன்ற நிர்வாகிகள் பல்வேறு சமூக சேவைகளை செய்துவருகிறார்கள். அவர்களை இன்னும் கூடுதலாக சமூக சேவைக்கு ஊக்குவிக்கும் முயற்சியாகத்தான் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோ சனை நடத்துகிறார்.''



விஜய்யின் வியூ கம்தான் என்ன?

இப்போது விஜய் ரசிகர் நற் பணி இயக்கத்தை "மக்கள் இயக்கம்' என பெயர் மாற்றி யிருக்கிறோம். மக்கள் இயக்கத்தின் முதல் மாநில மாநாடு பிரமாண்டமாகவும், ஆக்கப் பூர்வமாகவும் வெகு சீக்கிரம் நடைபெற விருக்கிறது. அதன்பிறகு பாருங் கள் எங்கள் வேகத்தை. ’

மக்கள் இயக்கம் தேர்தலில் தனித்து போட்டியிடுமா?

சமூக சேவையை ஒருங் கிணைத்து செய்றதுக்குத் தான் இந்த மாநாடு. அரசியல் பற்றி பிறகுதான் முடிவு செய்வோம்.’’

அ.தி.மு.க.வோடு கூட்டணி வைக்கப் போவதாக வும், ஜெயலலிதா கொட நாட்டிலிருந்து திரும்பியதும் அவரை நீங்கள் சந்திக்கப் போவதாகவும் செய்திகள் பரவலாக வருகிறதே?

மன்ற நிர்வாகிகள் தங்கள் விருப்பத்தை விஜய்யிடம் சொல்லியிருக்கிறார்கள். அதுதான் இப்படி வெளியில் செய்தியாக கசிந்திருக்கிறது.

முதலில் மாநாட்டை நடத்தப் போகிறோம். விஜய் ரசிகர்களையெல்லாம் தொண்டர்களாக மாற்றப் போகிறோம். அதன்பிறகுதான் அரசியல் குறித்து விவாதிப்போம்.’’

மாநாடு நடத்த வேண்டிய அவசியத்திற்கும், அரசியல் மூவ்களை இப்போது மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கும் என்ன காரணம்? எந்த நெருக்கடிகளுக்காக விஜய் அரசியல் தீவிரம் காட்டுகிறார்?

’’எந்த நெருக்கடியும் இல்லை. இது இயல்பானது. வழக்கமான ரசிகனின் குணாதிசயங்களிலிருந்து விஜய் ரசிகர்கள் மாறுபட்டவர்களாக, சமூக அங்கீகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என விஜய் விரும்புகிறார். அதற்காகத்தான் இந்த மாநாடு. அதற்கான நேரம் இப்போது வாய்த்திருக்கிறது. அவ்வளவுதான். மாநாட்டுக்குப் பிறகுதான் கூட்டணி குறித்து விவாதிப்போம்’
-என்றார் எஸ்.ஏ.சி.

அரசியல் மூவ் குறித்து எஸ்.ஏ.சி. மறக்காமல் மறைத்துப் பேசினாலும் ஜெயலலிதாவை எஸ்.ஏ.சி. சந்திப்பதற்கான வேலைகள் நடந்தபடியே இருக்கிறது. அதுமட்டுமில்லை... மாநிலம் முழுவதிலிருந்தும் விஜய்யை தொடர்பு கொண்டு பேசுகிறார்கள் பல அரசியல்கட்சி புள்ளிகள், மாஜி மந்திரிகள், தொழிலதிபர்கள். இதனால் அவர்களையெல்லாம் அழைத்துப் பேசவும் முடிவு செய்திருக்கிறார் விஜய். இதற்கான கூட்டம் அநேகமாக இன்னும் சில தினங்களில் நடக்கவிருக்கிறது.

காதலனின் வக்கிர கேமரா! சீரழிந்த இளம்பெண்கள்!


இளம்பெண் உமாராணிக்கு நாளை திருமணம். ஆனால் இன்று ஆற்றுக்குக் குளிக்கப் போனவள் வீடு திரும்பவில்லை. ஊர் முழுக்க தேடியலைந்த உமாராணியின் அம்மா தேவிகா... பதறியடித்தபடி அறந்தாங்கி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்... 21-ந் தேதி ஞாயிறு இரவு ஒன்பது மணிக்கு.

""ம்... விடிஞ்சா கல்யாணம்... பொண் ணை காணலை. வேறென்ன... விருப்பமில் லாத ஒருத்தனுக்கு கட்டிக்கொடுக்க ஏற்பாடு செஞ்சிருப்பீங்க... அவ விருப்பப்பட்டவ னோட ஓடிப்போயிருப்பா. சரி... சரி... எப்படியா இருந்தாலும் மாலையும் கழுத் துமா ஸ்டேஷன்லதான் வந்து நிப்பா... சொல்லி அனுப்புறோம் வாங்க'' என்று காக்கிகள் ஆறுதல்படுத்த... ""அய்யோ அவ ஆசைப்பட்டவனுக்குத்தானே கல்யாணம் பண்ணிவைக்க ஏற்பாடு பண்ணினேன். எங்கபோயி தொலைஞ்சாளோ?'' என்று தாய் தேவிகா கதற... புகாரை வாங்கிக்கொண்டு சீரியஸாக தேட ஆரம்பித்தனர் காக்கிகளும்.

இந்த நிலையில்தான்... இரண்டு நாட்களுக்குப் பிறகு புதன்கிழமை மதியம் நாகுடி மூடுபாலம் அருகே ஒரு சாக்குமூட்டை கிடக்க... மக்கள் கூட்டம் குவிந்திருக்கிறது.

தேவிகாவையும் கூட்டிக் கொண்டு போனது போலீஸ். சாக்குமூட்டைக்குள் சடலமாகக் கிடந்தாள் இளம்பெண் உமாராணி.

உமா கொலை செய்யப்பட்ட தன் பின்னணி தகவல்களை விசாரித்தபோது... ""மூர்த்திங்கிற பையனை லவ் பண்ணியிருக்குங்க இந்த உமா. இந்த மூர்த்தி இருக்கானே இவன் கிராமத்துல பொறந்தாலும் கில்லாடிப் பயலா பொறுக்கித்தனமா சுத்திக்கிட்டி ருப்பான். இவன் அண்ணன் வெளி நாட்டுக்குப் போயிட்டு வந்ததால ஓரளவுக்கு வசதி. உமாராணியோ ஒன்பதாவது வரை படிச்சுட்டு டவுன்ல ஒரு ஃபோட் டோ ஸ்டுடி யோவுல வேலை பார்த்தது. அப்புறம் மூர்த்தியின் ஊரிலுள்ள கயிறு திரிக்கிற கம்பெனியில வேலை பார்த்துக் கிட்டிருந்தது. இந்த மூர்த்தி பய வீட்டு தோப்பு வழியாத்தான் கம்பெனிக்குப் போகவேண்டியிருக்கும். அப்படிப் போகும்போது... லவ்வுங்கிற பேர்ல தன்னோட மோட்டார் ரூம், தோப்புன்னு கூட்டிட்டுப் போய் அனுபவிச்சவன்... அதோட விட்டிருந்தா பரவாயில்ல. அவகூட உல்லாசமா இருக்கிற மாதிரி விதவிதமா கேமராவால படம் பிடிச்சிருக்கான்.


அந்தப் பொண்ணுக்கு பீர் வாங்கிக் கொடுத்து குடிக்கவெச்சு... எப்படி எப்படியெல்லாம் கேவலமா படம் பிடிக்கணுமோ அப்படியெல்லாம் எடுத்திருக்கான். ப்ச்... பாவம்ங்க ஒரு தடவை "ஏன் மாமா என்னை இப்படில்லாம் படம் எடுக்குறே'ன்னு கேக்குது உமா. அதுக்கு இந்த ராஸ்கல், "சம்பாதிக்கத்தான்'னு அசால்ட் டா சொல்வதும், அந்த வீடியோவில் பதிவாகி யிருக்கு. எனக்கென்னவோ இதையெல்லாம் இண்டர்நெட்டுக்கு வித்துருப்பானுங்களோன்னு தோணுது. இவனோட நண்பர்களான குமார், கோபியும் சேர்ந்துதான் இப்படிக் கேவலமான வேலையில ஈடுபட்டிருக்கானுங்க. இப்படி வக்கிர வேலையில் ஈடுபடுத்தின மூர்த்தி இந்த பொண்ணையா கல்யா ணம் பண்ணிப்பான்?

அதான் நாளைக்கு கல்யாணம்னா... இன்னைக்கு ஆத்துக்குக் குளிக்கப்போன புள்ளைய மோட்டார் ரூமுக்கு கூட்டிட்டுப் போய் கரண்ட் ஷாக் வெச்சு கொன்னுட்டு... சாக்குமூட்டையில கட்டி ஆத்துல விட்டுட்டு ஊரைவிட்டே ஓடிட்டானுங்க'' என்ற பகீர் பின்னணி சொன்னவர் அந்த சி.டி.யையும் நம்மிடம் கொடுத்தார்.

அடப்பாவமே... அவர் சொன் னது போலவேதான் அந்த வீடியோ காட்சிகள் நம்மை வேதனைப்பட வைத்தன. மூர்த்தியின் வாழைத்தோப் பில் சேலை, தாவணியுடன் குடும்பப் பெண்ணாக தோன்றுகிறாள் உமா ராணி. பிறகு படிப்படியாக மூர்த்தி சொல்வதற்கிணங்க ஆடைகளை அவிழ்க்கிறாள். இப்படி பலவிதமான இடங்களில் விதவிதமாக தோன்றி ஆபாசமாக நிற்கிறார். அதோடு மூர்த்தியுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. வேளாங்கண்ணி லாட்ஜில் மட்டுமே பல வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கு மேல் ஓடக்கூடியதாக இருக்கிறது இந்த அந்தரங்க காட்சிகள். மேலும் செல்ஃபோனில் எடுக்கப்பட்டது மட்டுமல்ல... தெளிவாகத் தெரியும் அளவுக்கு வீடியோ கேமராவால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதை வக்கிரப்புத்தியோடு மட்டும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஏனென்றால்... பல வீடியோ காட்சிகளில் மியூசிக் அண்ட் மிக்ஸிங் வேலையெல்லாம் செய்திருக்கிறான். அது மட்டுமல்ல... ஒரு மெடிக்கல் ஷாப்பில் அமர்ந்திருக்கும் இன்னொரு இளம்பெண்ணையும் விரட்டி விரட்டி கேமராவில் பதிவு செய்திருக்கிறான். ஆக... மூர்த்தியும் அவனது நண்பர்களும் இதை ஒரு பிசினஸாகவே செய்திருப் பார்கள் என்றுதான் தோன்றுகிறது.

உமா கொலை சம்பந்தமாக வக்கிர காதலன் மூர்த்தி பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளான்.


கதறியபடி தாய் தேவிகாவோ... ""என் கணவர் இறந்த பிறகு ரொம்ப கஷ்டப்பட்டு ரெண்டு பிள்ளைகளையும் வளர்த்தேங்க. மூணு மாசத்துக்கு முன்னால பக்கத்து ஊரான மேற்பனைக் காடுவைச் சேர்ந்த சன்னாசி மகன் மூர்த்திங்கிற பையனுக்கு வேறு பெண்ணோடு கல்யாண ஏற்பாடு பண்ணினாங்க. அப்பதான் இவ மருந்து குடிச்சு தற்கொலை பண்ணிக்கப் போனா. காப்பாத்தி கேட்டப்போதான், அவன்கூட பழகி சுத்தினது... அதனால கர்ப்பமான விஷயத்தை எல்லாம் சொல்லி அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னா. கல்யாண மாலை போட வேண்டிய சண்டாளப்பாவி... சாவு மாலைபோட வெச்சுட்டானே. என்புள்ளை சாவுக்குக் காரண மான அந்த மூர்த்தியையும் அவனது நண்பர்களையும் கடவுள் சும்மா விடாது'' என்று சாபம் விட்டபடி கதறுகிறார்.

காவல்துறை மூர்த்தியை கஸ்டடியில் எடுத்து உண்மை யாக விசாரித்தால்... காதலியின் அந்தரங்கத்தை வியாபாரமாக்கிய மூர்த்தியின் நெட்வொர்க்கையும் இவர்களின் வக்கிர கேமராவில் எத்தனை எத்தனை இளம்பெண்கள் சிக்கியிருக்கிறார்கள் என்பதையும் கண்டுபிடிக்கலாம்.

உலகின் நிஜ ஹீரோ!


அமெரிக்கா இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஜப்பான் மீது வீசிய அணுகுண்டுகளை விடவும், 9/11-ல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது ஒசாமா பின்லேடன் ஆட்கள் நடத்திய தாக்குதலை விடவும் அதிக பாதிப்புகளை அமெரிக்க நிர்வாகத்தின் மீது ஏற்படுத்தி யிருக்கிறது விக்கிலீக்ஸ் இணைய தளம் வெளியிட்டுள்ள தகவல்கள்.

கொஞ்ச காலமாகவே அமெ ரிக்கா என்ற யானையின் காதுக்குள் புகுந்த எறும்பாக குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருந்தது விக்கிலீக்ஸ் இணையதளம். இதன் நிறுவனரான ஜூலியன் அசான்ஜே, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். கணக்கில் பட்டங்கள் பல பெற்றவர். ஆனால், அவர் போட்ட கணக் கெல்லாம், உண்மைகளை எப்படி வெளியே கொண்டு வருவது என்பது பற்றித்தான்.
தனது சகாக்களோடு சேர்ந்து அவர் தொடங்கிய விக்கிலீக்ஸ் இணையதளத்தில் ஆஃப்கானிஸ் தான் மீது அமெரிக்க-பிரிட்டன் படைகள் தாக்குதல் நடத்தியபோது, அப்பாவிப் பொதுமக்கள் எப்படிக் கொல்லப்பட்டார்கள், தீவிரவாதிகள் என்று சந் தேகிக்கப்பட்டவர்கள் என்ன பாடுபடுத்தப்பட்டார்கள், மொத்த உயிர்ப்பலிகள் எவ்வளவு, அதில் அமெரிக்க- பிரிட்டன் படைகளின் தரப்பில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் என்ன என்பதையெல்லாம் ஆவணங்களோடு அம்பலப்படுத்தப்பட்டன. அமெரிக்காவுக்கு அசான்ஜே கொடுத்த முதல் அதிர்ச்சி வைத்தியம் இதுதான்.

“அத்தனையும் அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனில் இருந்த ஆவணங்கள். இது எப்படி விக்கிலீக்ஸுக்குப் போனதுன்னு தெரியலை என்று அமெரிக்காவின் சி.ஐ.ஏ உள்பட எல்லா அரசு இயந்திரங்களும் பேய் முழி முழித்தன. திருடனுக்குத் தேள்கொட்டியது போல அமெரிக்க அரசு தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தில், ஈராக் மீது போர் தொடுத்த அமெரிக்கா அங்கே எப்படியெல்லாம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது என்பதையும் விக்கிலீக்ஸ் லீக் செய்தது. இது இரண்டாவது அதிர்ச்சி வைத்தியம்.

மூன்றாவது என்ன அதிர்ச்சியைத் தரப்போகிறது என்று அமெரிக்கா மட்டுமல்ல, உலகநாடுகள் அனைத்திலும் உள்ள இணைய வாசகர்கள் எதிர்பார்த்திருந்தனர். எந்த நாட்டின் மீதான படையெடுப்பு ரகசியங்கள் வெளிவரப்போகின்றன என்று எதிர்பார்த்த நிலையில்தான், ஆற்றோடு போன நரி, அய்யோ உலகம் போச்சே என்று கத்திக்கொண்டே போனதுபோல இந்தியா உள்பட பல நாடுகளையும் தொடர்பு கொண்ட அமெரிக்க அரசு நிர்வாகம், "விக்கிலீக்ஸ் பல ஆவணங்களை வெளியிட்டு நமக்கிடையிலான உறவுகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும். நீங்கள் ஏமாந்துவிட வேண்டாம்' என்றது. சம்மன் இல்லாமல் அமெரிக்கா ஏன் ஆஜராகிறது என்று பல நாடுகளும் யோசித்தன. விக்கிலீக்ஸ் இணையதளம் எதையாவது வெளியிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி, தடையும் விதித்தது அமெரிக்கா.

விக்கிலீக்ஸ் சாதுர்யமாக, தன்னிடமிருந்த ஆவணங்களை நியூயார்க் டைம்ஸ், கார்டியன் போன்ற சர்வதேச பத்திரிகைகளுக்குக் கொடுத்து வெளியிட வைத்தது. ஒபாமா என்ற அதிபர் அமெரிக்கா வின் முகமூடிதான், அமெரிக்க நிர்வாகத்தின் ஒரிஜினல் முகம் என் பது ஆபத்தானது என்பதை அந்த ஆவணங்கள் அம்பலப்படுத்தின.

பல நாடுகளிலும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் பதிவாகியுள்ள ஆவணங்களும், தூதரக அதிகாரி களும், அமெரிக்க நிர்வாகத்தினரும் போனில் நிகழ்த்திய உரையாடல்களின் எழுத்து வடிவமும் தான் தற்போது வெளிப்பட்டு, அமெரிக்காவைக் குலை நடுங்க வைத்திருக்கிறது.

சமீபத்தில்தான் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் சந்தித்துக் கைக்குலுக்கியிருந்தனர். ஆனால், புடினைப் பற்றிய அமெரிக்காவின் மதிப்பீடு என்ன தெரியுமா? அவர் ஒரு ஆல்ஃபா நாய்... அடஙொக்க மக்கா! அமெரிக்க மிரட்டலுக்கு அடங்காமல் குரல் கொடுக்கும் ஈரானின் அகமதிநிஜாத்துக்கு வைக்கப்பட்டுள்ள பெயர், அடால்ஃப் ஹிட்லர். இந்த அம்பலம் மூலம் கிடைத்துள்ள ஒரு நல்ல அம்சம், ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என அமெரிக்க நிர்வாகம் ஒத்துக் கொண்டிருப்பது தான். எந்த நாட்டின் மீது படையெடுத்தாலும் கூட்டாளியாகச் சேர்த்துக்கொள்ளும் இங்கிலாந் தையும் அமெரிக்கா விட்டுவைக்கவில்லை. அங்கே பக்கிங்ஹாம் அரண்மனையில் என்னென்ன காதல் லீலைகள் நடக்கிறது, அதன்மூலம் அரச குடும்பத் தில் என்னென்ன பிரச்சினைகள் எழும் என்பதையெல்லாம் தனது தூதரக அதிகாரிகளை வைத்து உளவு பார்க்க வைத்தது. இதனால் இங்கிலாந்து பிரதமர் கேமரூனுக்கும் நெருக்கடி.

சின்ன நாடான கரிபீயன் தீவு முதல் தனது பெரிய எதிரியான சீனா வரை எல்லா நாடுகளிலும் குழப்பத்தை உண்டாக்கும் வேலைகளை அமெரிக்கத் தூதரகங்கள் மேற்கொண்டிருப்பதும் அம்பலமாகியுள்ளது.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக விரும்பும் இந்தியாவுக்கு எதிராக காய் நகர்த்தும் வேலைகளையும் அமெரிக்கா செய்து வருவது வெட்டவெளிச்சமாகியுள்ளது. ஐ.நா.சபை பொதுச்செயலாளரில் தொடங்கி அங்கே முக்கிய பொறுப்பில் இருக்கும் அனைவரையும் உளவு பார்க்கும் வேலையும் நடந்து வருவதை விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்கா மீது கோபமும் சந்தேகமும் கொண்டுள்ளன.

உலக நாட்டாண்மையின் உண்மை முகத்தைத் தோலுரித்ததன் மூலம் சூப்பர் ஹீரோவாகியிருக்கிறார் ஜூலியன் அசான்ஜே. விட்டுவைக்குமா அமெரிக்கா? சர்வதேச போலீசாரின் உதவியுடன் அவரைக் கைது செய்வதற்கான பிடிவாரண்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளது.
ஸ்வீடன் நாட்டில் 3 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்-கற்பழித்தார் என்றெல்லாம் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டு அந்த நாட்டு நீதிமன்றத்தில் அவருக்குத் தண்டனை அறிவிக்கப் பட்டுள்ளது. மேல் முறையீடு செய்துள்ள அசான்ஜே, மாறுவேடத்தில், வேறுவேறு பெயர்களுடன் வெவ்வேறு பாஸ்போர்ட்களில் உலகின் பல நாடுகளிலும் உள்ள ஓட்டல்களில் தங்கி, பாதுகாப் பில்லாத நிலையில் உள்ளார்.

அவர் வெளிப்படாவிட்டாலும், அவரது விக்கிலீக்ஸ் இன்னும் பல உண்மைகளை வெளிப் படுத்தும் என்ற அச்சத்தில் ஆட்டம் கண்டிருக்கிறது அமெரிக்கா.

Thursday, October 28, 2010


'பானு'... பெயரைக் கேட்டாலே 'சும்மா அதிரும்' அளவுக்குத் திரை உலகில் கொடி


கட்டிப் பறக்கும் மேக்கப் துறையின் முதல் பெண் சாதனையாளர். 'சிவாஜி', 'எந்திரன்' என்று ரஜினியின் கலர் மாற்றி இளமை ஏற்றியவர்.


"நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இதே சிங்காரச் சென்னைதான். ஸ்கூல் படிக்கும்போது டீச்சர், 'எதிர்காலத்தில் நீங்க என்னவாக ஆசைப்படுறீங்க?'ன்னு கேட்கும்போது, 'டாக்டர்', 'இன்ஜினீயர்'னு பலரும் என்னன்னவோ சொல்லுவாங்க. அப்போ எனக்கு மட்டும் என்ன சொல்றதுன்னே தெரியாது. அந்த அளவுக்கு, சின்ன வயதில் என் எதிர் காலத்தைப்பற்றி எந்த ஒரு கனவும் இல்லாமல் தான் இருந்தேன்.

பி.காம். படிச்சு முடிச்சு வெளியே வந்தபோது, கல்லூரி வாழ்க்கை எனக்கு நிறையக் கற்றுத் தந்திருந்தது.

சொந்த வேலையா அமெரிக்கா போகும் வாய்ப்பு. அந்தப் பயணம்தான் என் வாழ்க்கைப் பாதையையே தீர்மானிச்சது. என் தோழிகள் சிலர் மூலமா ஹாலிவுட் மேக்கப் ஜாம்பவான் பாப் கேலியின் அறிமுகம் கிடைச்சது. மேக்கப் துறையின் பல நுணுக்கங்கள் கத்துக்கிட்டு, அமெரிக்காவின் பிரபல மேடை நாடகங்களுக்கு மேக்கப் வுமனாகப் பணியாற்றினேன். தூக்கத்தில்கூட, மறு நாளுக்கான மேக்கப் சிந்தனைகள்தான் மனசுக்குள் படம் படமா ஓடும். அவ்வளவு ரசிச்சு, லயிச்சு மேக்கப் வேலையை ஒரு கலையா செஞ்சேன். கல்யாண ரிசப்ஷன் மேக்கப்புக்கும், ஒரு பார்ட்டிக்கு ஜாலியா போற மேக்கப்புக்கும், ஒரு கேரக்டரா ஒருவரை மாத்தும் மேக்கப்புக்கும் இருக்கிற வித்தியாசங்கள் புரிய ஆரம்பிச்சது. ஜாலியா ஒரு பொழுதுபோக்குக் காகக் கத்துக்கிட்ட விஷயம், எனக்குள் ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்தி, அதையே என் வாழ்க்கையாக மாற்றியது!

மேடை நாடகங்களில் மட்டுமே கவனம் செலுத்திய என்னை, என் உறவினரான பி.சி.ஸ்ரீராம், தமிழ்நாட்டின் விளம்பர உலகத்துக்கு அறிமுகப்படுத்தினார். 1990-ம் வருடம் வெளிவந்த 'நிவாரன் 90'ல் வேலை பார்த்தேன். என் முதல் விளம்பரம். என்னதான் உறவுப் பெண்ணாக இருந்தாலும், வேலை சரியில்லை என்றால், கண்டபடி திட்டி விடுவார் பி.சி. முதல் ஷூட்டிங் என்பதால், லைட்டிங்குக்கு ஏத்த மேக்கப், டிரெஸ் கலர்னு அந்த சூட்சுமங்கள் பழகாததால், பலமா கிடைச்சது டோஸ். ஒருவழியா ஷூட்டிங் முடிஞ்சதும், 'போதும்டா சாமி... இந்த வேலையை விட்டுரலாம்'னு வீட்லயே உக்கார்ந் துட்டேன். ஆனா, அந்த விளம்பரம் செம ஹிட். அடுத்தடுத்து நிறைய விளம்பர வாய்ப்பு கள் வந்துச்சு. 'நமக்கு எதுக்கு வம்பு'ன்னு கண்டுக்காம இருந்தேன். பி.சி சார்தான், 'வேலையில் இதெல்லாம் சகஜம்'னு என்னைத் தேத்தி தொடர்ந்து வேலை கொடுத்தார்.

விமர்சனங்களை ஏத்துக்கப் பழகணும். அது நம் தவறுகளை நாம் திருத்திக்கக் கிடைக்கிற வாய்ப்புன்னு கத்துக்கிட்டேன். ப்ரியதர்ஷன் சார் மூலமா மலையாள சினிமாவுக்குள் நுழைந்தேன். மேக்கப்னா பலரும் நினைக்கிற மாதிரி ரோஸ் பவுடர் போடும் வேலை மட்டுமே இல்லை. ஷூட்டிங்குக்கு முன் மேக்கப் டெஸ்ட், ஸ்க்ரீன் டெஸ்ட்னு நிறைய வேலைகள் இருக்கும். அதில் எல்லாம் நினைச்சபடி திருப்தியா அமைஞ்சாதான், படப்பிடிப்பே தொடங்கும்!

கோக், பெப்ஸி, ப்ரூ, ஹார்லிக்ஸ், கேட்பரீஸ்னு பல தேசிய அளவிலான விளம்பரங்களில் வேலை பார்க்க வாய்ப்பு வந்தது. சச்சின், ராகுல் டிராவிட்டுக்கெல்லாம் மேக்கப் பண்ணினேன். அப்போதான் ஒரு பெரிய பிரச்னை. மேக்கப் யூனியனில் பெண்கள் உறுப்பினரா சேர முடியாது. அதனால், தேசிய அளவில் வேலை பார்க்க எனக்குத் தடை விதிச்சாங்க. நியாயம் கேட்டு, டெல்லியில் உள்ள அகில இந்திய மகளிர் அமைப்புக்குச் சென்றேன். அந்த அமைப்பின் தலைவர் நிர்மலா எனக்காக சென்னை வந்து, தமிழ்நாடு நடிகர் சங்கத்தில் முறையிட்டார். மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம், பிரியதர்ஷன்னு எல்லோரும் எனக்காகப் போராடினாங்க. பெரும் போராட்டத்துக்குப் பிறகு, வெற்றிகரமாக யூனியனில் உறுப்பினராக இணைத்துக்கொள்ளப்பட்டேன். பிறகு தொடர்ந்து விளம்பரங்களில் பணி புரியும்போதுதான் இயக்குநர் ஜீவா அறிமுகமானார். அந்த நட்பில் கிடைச்சதுதான் '12 பி' பட வாய்ப்பு. இப்போ வரை என் மேக்கப் சாதனங்களை ஜோதிகாவுக்குத்தான் அதிகமாப் பயன்படுத்தி இருக்கேன்.

அதற்கடுத்து தமிழில் ஹீரோக்களின் கேரக்டருக்குப் பொருத்தமான கெட்டப்களை அமைச்சுக் கொடுக்கும் வாய்ப்பு கிடைச்சது. விக்ரமின் 'அந்நியன்' லுக்குக்காக நான் நிறையக் கஷ்டப்பட்டேன். ஷங்கர் சார், என்னிடம் அந்த கேரக்டர்களின் முக்கியத்துவத்தையும், சூழ்நிலையையும் சொன்னார். அதை வைத்து உருவானதுதான் 'அம்பி', 'அந்நியன்', 'ரெமோ'க்கான லுக்ஸ். அது எவ்வளவு கஷ்டமான வேலையா இருந்தாலும், இஷ்டப்பட்டு செஞ்சேன். அதுக்குக் கிடைச்ச அவார்டுதான், 'சிவாஜி'யில் ரஜினி சாருக்கு மேக்கப் வாய்ப்பு. 'என்னை காலேஜ் ஸ்டூடன்ட் மாதிரி ஆக்கிட்டீங்க'ன்னு பாராட்டினார் ரஜினி சார். இப்போ 'எந்திரன்' படத்திலும் எனக்கு வாய்ப்பு கிடைச்சது. 'எப்படி ரஜினி சார் மாதிரி பெரிய ஆர்ட்டிஸ்ட்டுக்கு பயப்படாம வேலை செய்றே?'ன்னு நண்பர்கள் கேட்பாங்க. என்னைப் பொறுத்தவரை... வேலைன்னு வந்துட்டா, அவங்க யாரா இருந்தாலும்... என் தொழிலில் அனைவரும் சமம். அமெரிக்காவிலேயே ஆரம்பிச்ச பழக்கம் அது... நமக்குப் பிடிச்ச வேலையை, ரசிச்சு, லயிச்சு செய்ய ஆரம்பிச்சா... எல்லா உயரங்களையும் எட்டிப் பிடிக்கலாம்!"

"நான் தயாரிப்பாளர் ஆனதுமே, கமல் சாரோடு வேலை பார்க்க ஆசைப்பட்டேன்.


அவரும் அப்பப்போ பேசிட்டே இருந்தார். திடீர்னு ஒருநாள் கமல் சார் கூப்பிட்டார். ஒரு கப்பல் ஸ்க்ரிப்ட் சொன்னார். அட்டகாசமா இருந்தது. இயக்குநர் யார் என்பதில் எங்கள் இருவருக்குமே ஒரே சாய்ஸ்தான் தோணுச்சு. அது கே.எஸ்.ரவிக்குமார். 'மன்மதன் அம்பு'வில் பிரமாண்டம், த்ரில், லவ், காமெடி எல்லாமே சரியான காம்பினேஷனில் அமைஞ்சு இருக்கு. டார்கெட்ல அம்பு ஹிட்டாகும்!"-ஆர்வமாகப் பேசுகிறார் உதயநிதி ஸ்டாலின்.

" 'மன்மதன் அம்பு' என்ன மாதிரியான படம்?"

"டைட்டில் கார்டில் இருந்து க்ளைமாக்ஸ் வரைக்கும் காமெடி. த்ரிஷா... கமலுக்கு ஜோடியா, இல்லை மாதவனுக்கு ஜோடியாங்கிறதுதான் படத்தோட ஒன் லைன். நிஜ மன்மதன் யாருங்கிறது சஸ்பென்ஸ்!"




"கப்பலில் ஷூட்டிங் நடத்தியது எப்படி இருந்தது?"


"கப்பல் ஸ்க்ரிப்ட்னு முடிவானதும், உலகத்தில் உள்ள பெரிய கப்பல்களைத் தேடினோம். 'எம்.எஸ்.சி' வகையறா கப்பல்களில் ஒரு வகை 'ஸ்பிளெண்டிடா'. 20 மாடி, 1,600 பணியாளர்கள், 50 ஆயிரம் பயணிகள்னு அது ஒரு மிதக்கும் நகரம். கப்பலில் 10 ரெஸ்டாரன்ட்டுகள், கேசினோக்கள், நீச்சல் குளங்கள் இருக்கு. இந்தக் கப்பல் தினம் ஒரு நகரமாக ஐரோப்பாவின் முக்கிய நகரங்களைத் தொட்டுச் செல்கிறது. நாம் விரும்பினால் இறங்கிச் சென்று அந்த நகரத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம். புதிய அனுபவம் என்பதால், படப்பிடிப்புக்கு வரும் அனைவரையும் குடும்பத்தோடு வரச் சொன்னோம். கமல் சார், கவுதமி மேடம், கே.எஸ்.ரவிக்குமார் சார் குடும்பம், த்ரிஷா, அவங்க அம்மா, மாதவன், அவர் மனைவி, சங்கீதா, கிரிஷ், நான், கிருத்திகா என்று 70 பேர் போய் இறங்கினோம். நாங்கள் உணர்ந்த அதன் பிரமாண்டத்தை அப்படியே படத்தில் கொண்டுவந்து இருக்கிறோம்."




" 'கமல், தன் பரிசோதனை முயற்சிகளைத் தயாரிப்பாளர் செலவில் செய்து பார்ப்பார்' என்பார்கள். 'மன்மதன் அம்பு'வில் அதுபோன்ற சோதனை முயற்சிகள் உண்டா?"

"கப்பலில் படப்பிடிப்பு என்பதுதான் இதில் புது முயற்சி. பெரிய கப்பல், பார்த்திராத இடங்கள் என்று நான்தான் லொகேஷன் தேடத் தொடங்கினேன். அதற்கே, 'உதய், சிங்கப்பூரிலேயே சின்னதா ஒரு கப்பலைவெச்சு முடிக்கலாம்' என்று கமல் சார் செலவைக் குறைக்க வழி சொன்னார். நான்தான் விடாப்பிடியாக, 'இருக்கட்டும் சார்... உங்களுடைய ஸ்க்ரிப்ட்டுக்கு ஸ்பிளெண்டிடாதான் கரெக்டா இருக்கும்' என்று அவரைச் சம்மதிக்க வைத்தேன். ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, டாப் ஆங்கிளில் கப்பலில் படம்பிடித்த காட்சிகள் அனைத்துமே அவ்வளவு அழகா வந்து இருக்கு. மற்றபடி ரெட் ஒன் கேமரா, லைவ்சவுண்ட், லைவ் எடிட்டிங் என கமல் சாரின் ஃபேவரைட் டெக்னிக்கல் அம்சங்கள் அனைத்தும் 'மன்மதன் அம்பு'வில் உண்டு!"




"நீங்க எப்பதான் நடிக்கப் போறீங்க?"

"ஆமாங்க. எல்லாரும் கேக்குறாங்க. விகடன்ல படத் தலைப்பு 'ஒரு கல் ஒரு கண்ணாடி'ன்னு போட்டுட்டீங்க. அப்பா அதைப் பார்த்துட்டு, 'டைட்டிலை என்னைத் தவிர எல்லார்கிட்டேயும் சொல்லிட்டியா?'ன்னு விசாரிச்சார். அடுத்த மாசம் ஷூட்டிங் போறோம். இப்போ நான் ஹீரோ ஆகுறதுக்கான ஹோம் வொர்க்கில் இருக்குறேன். ஜிம்ல வொர்க்-அவுட் பண்றேன். மாஸ்டர் ஷோபியிடம் டான்ஸ் கிளாஸ் போயிட்டு இருக்கேன். காலையில், 'பிரதர் என்ன இன்னும் தூக்கம்? கிளாஸுக்குக் கிளம்புங்க'ன்னு ஆர்யா தினம் மெசேஜ் தட்டுவார். அதேபோல் கமல் சார், விஜய், சூர்யா மூணு பேரும் நிறைய டிப்ஸ் தர்றாங்க. அடுத்த வருஷம் கண்டிப்பா என் படம் ரிலீஸ் ஆகிரும்!"




" 'தமிழ் சினிமாவை கலைஞர் குடும்பம் வளைத்துவிட்டது. சிறிய படங்கள் வெளியிட தியேட்டர்களே கிடைப்பது இல்லை' என் கிறார்களே?"

"இதில் உண்மை இல்லை. 'களவாணி' படத்தை நாங்கள் வாங்க வில்லை. ஆனால், அதற்கு தியேட்டர் கிடைத்தது. மிகப் பெரிய வெற்றியும் கிடைத்ததே! எங்களைப்பற்றி பேசுபவர்களிடம், பொறாமை இருக்கும் அளவுக்கு சினிமா வளர வேண்டும் என்ற பொது நோக்கு இல்லை. இப்போது, 'மைனா' என்ற சிறிய பட்ஜெட் படத்தை நான் வாங்கி, தீபாவளிக்கு வெளியிடுகிறேன். ஆனால், அந்தப் படத்தின் சேட்டி லைட் ரைட்ஸை விஜய் டி.வி. வாங்கி இருக்கிறது. எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லையே. படம் பார்த்த கமல் சார், இயக்குநர் பாலா உட்பட அனைவரும் 'மிகச் சிறப்பான படம். இதுபோன்ற நிறைய நல்ல சின்ன பட்ஜெட் படங்களையும் வாங்கி வெளியிடுங்கள்' என்கிறார்கள். குற்றம் சொல்பவர்களுக்கு இதுதான் என் பதில்!"

இதுதான் என் அடுத்த படத்துக்கான கெட்டப்... நல்லா இருக்கா?" - அடர்ந்த


தாடியுடன் சிரிக்கிறார் அமீர். மண் குடத்தை உடைத்ததுபோல் மனதைத் திறக்கும் படைப்பாளி. 'ஆதிபகவன்' படத்துக்காக ஜெயம் ரவி -
நீத்து சந்த்ராவை பரேடு எடுக்கப் போய் இருக்கிறார் பாங்காக்கில்!


"கத்திக் குத்துகளின் காயம் ஆறலை. ஆனாலும், இப்ப நான் ரொம்பத் தெளிவாகிட்டேன். கட்டிப் பிடிச்சு வாழ்த்தியவங்க கத்தியைச் சொருகவும் தயங்க மாட்டாங்கன்னு எனக்கு 'யோகி' கத்துக்கொடுத்தது. அதுக்காகக் கவலைப்படலை. ரொம்பப் பக்குவப்பட்டு இருக்கேன். நம்மளோட கால் சறுக்குமாங்கிறதைக் கவனிக்க, இங்கே நிறையப் பேர் காத்திருக்காங்க. அடுத்தவங்களோட தோல்விதான், இங்கே நிறையப் பேருக்கு வெறியாவும் வெற்றியாவும் இருக்கு. இந்த அளவு குரூரத்தை நான் எதிர் பார்க்கலை. ஆனால், அதைவிட அதிகமான குரூரத்தைத் தாங்கவும் இப்போ என்கிட்ட சக்தி இருக்கு!"

" 'யோகி'யின் விமர்சனங்கள் உங்களை அந்த அளவுக்கு பாதிச்சதா'

"விமர்சனங்களுக்கோ, மாற்றுக் கருத்துக்களுக்கோ பயந்தா... படம் எடுக்கவே வந்து இருக்க மாட்டேன். நெருப்போடு நெருப்பா அடுப்புல வெந்து ஆக்கிப் போடுற சமையல்காரன் மேலகூட சரமாரியா விமர்சனம்வைக்கிற உலகம் இது. ஆனா, 'யோகி'க்கு எதிரான விமர்சனங்கள் அந்தப் படைப்பின் மேல் எழுப்பப்பட்டதாக நான் நினைக்கலை. தனிப்பட்ட அமீர் மேல வந்து விழுந்த அம்புகளாகத்தான் பார்க்கிறேன். 'அமீர்'ங்கிறவன் இத்தனை பேரோட கண்களை உறுத்திய ஆளாங்கிறது இப்பதான் எனக்கே தெரியுது. ஏன், இத்தனை பேர் சேர்ந்து என்னை அடிச்சாங்கன்னு தெரியாம நான் துடிச்சுப்போனது உண்மை! நிதானமா யோசிச்சப்பதான் பலர் சேர்ந்து அடிக்கிற அளவுக்கு நான் பலசாலியா இருக்கேன்னு தெரிஞ்சது. நோஞ்சானை அடிக்க 100 பேர் ஒண்ணு சேர மாட்டாங்க இல்லையா?"




" 'ஏன்டா 'யோகி' எடுத்தோம்'னு வருத்தப்படுறீங்களா?"

"கிடையவே கிடையாது. 'ஏன்டா எடுத்தோம்'னு நான் நினைக்கிற ஒரே படம் 'பருத்தி வீரன்'தான். அந்த ரணத்தில் இருந்து முழுசா வெளியே வந்துட்டேன். 'யோகி' மக்களைப் போய்ச் சேரலையே தவிர, மக்களுக்குப் பிடிக்கலைன்னு சொல்ல முடியாது. எந்தப் படத்தை எடுக்கணும்கிறதை நான்தான் தீர்மானிக்கணும். எல்லோருடைய இஷ்டத்துக்கும் ஏத்த மாதிரி மாற நான் ஒண்ணும் களி இல்லை... உளி! மனசுக்குப் பிடிச்சதை அணுஅணுவா செதுக்கிக் கொடுக்கிற கூரான உளி. 'இவர் இப்படித்தான்'கிற வளையத்தைப் படைப்பாளிகள் கழுத்தில் ஏன் மாட்டிவிடுறாங்கன்னு தெரியலை.

'கிராமத்துப் படம்னா அது பாரதிராஜாதான்'னு நாம் சொல்றது அவரைக் காயப்படுத்தத்தான் செய்யும். அந்தக் கோபத்தில்தான், அவர் 'சிகப்பு ரோஜாக்கள்' கொடுத்தார். வெற்றியோ, தோல்வியோ... விருப்பப்பட்டதைச் செய்கிறவன் நான். 'யோகி'யை இப்பவும் நான் விரும்புகிறேன்!"

" 'ஆதிபகவன்' எப்படிப்பட்ட ஆள்?"

"பில்ட்-அப் கொடுக்க விரும்பலை. 75 வருஷங்களா தமிழ் சினிமாவில் சக்கரமா சுத்திச் சுத்தி வர்ற வழக்கமான கதைதான். 'ஜெயம்' ரவியை ஆசையும் மீசையுமா அடியோடு மாற்றி இருக்கேன். 'கதை பழசு... களம் புதுசு...'ங்கிற பக்கா கமர்ஷியல் படம் 'ஆதிபகவன்'. இறங்கி அடிக்கணும்னு தோணுச்சு. இறங்கிட்டேன்!"

"தமிழ் சினிமாவோட சமீப கால நிகழ்வுகளை எப்படிப் பாக்குறீங்க?"

"சத்தியமா... பயமா இருக்கு. ஏதோ ஒரு குக்கிராமத்தில் இருந்து கிளம்பி வந்து, கற்பனைகளை மட்டுமே மனசு முழுக்க நிரப்பிட்டு, கோடம்பாக்கத்தில் அலையுறவங்களை நினைச்சுப் பரிதாபமாவும் பயமாவும் இருக்கு. திறமை இருந்தால், யார் வேணும்னாலும் ஜெயிக்கலாம்கிற நிலைமை தமிழ் சினிமாவில் இனி சாத்தியம் இல்லையோன்னு தோணுது. இன்னிக்கு தமிழ் சினிமாவைச் சுத்தி இரும்பு வேலி முளைச்சிடுச்சு. அதை உடைச்சு உள்ளே நுழையக்கூடிய சக்தி... பசியும் பட்டினியுமா அலையும் உதவி இயக்குநர்களுக்கு இருக்குமான்னு தெரியலை. இது நல்லதுக்கு இல்லை. அத்தனைப் படைப்பாளிகளும் அவசரமா யோசிக்க வேண்டிய வேதனை இது!"

"பாலா தந்தையாகி இருக்கிறார்... சசிகுமார் நேஷனல் அவார்டு வாங்கி இருக்கிறார்..."


"சொன்னா நம்ப மாட்டீங்க... நான் இன்னும் பாலாவுக்கு வாழ்த்துகூடச் சொல்லலை. அவனும் ஷூட்டிங்ல இருக்கான். நானும் ஷூட்டிங்ல இருக்கேன். 'போனிலாவது வாழ்த்து சொல்லி இருக்கலாமே'ன்னு நீங்க கேட்கலாம். 'கங்கிராட்ஸ்'ங்கிற ஒற்றை வார்த்தையால என் உள்ளத்தில் பொங்குற சந்தோஷத்தை மொத்தமா கொட்டிட முடியாது. பாலாவோட மகள் எப்படி இருக்கா... எப்படிச் சிரிக்கிறா?னு பக்கத்தில் இருந்து பார்க்க மனசு துடிக்குது. எங்க வீட்டு மகராசிதானே அவங்க... இந்த சித்தப்பனைக் கொஞ்சம் லேட்டாவே பார்க்கட்டும்.

சசி, நேஷனல் அவார்டு வாங்கியதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். சினிமாவை ஆத்மார்த்தமா, அறிவுபூர்வமா அணுகுறவன் அவன். ஆனா, அவனைப் பாராட்டி நான் ஒரு வார்த்தைகூடச் சொல்லலை. 'நம்ம வளர்ச்சி அண்ணனைப் பொறாமைப்படவெச்சிடுச்சு'ன்னுகூட அவன் நினைக்கலாம். ஆனா, என் மனசுல பொறாமை இல்லை. சீக்கிரமே ஆறக்கூடிய சின்ன புண் மட்டும்தான் இருக்கு. கல்லூரியில படிக்கிறப்ப என்னதான் ஆசாபாசமாத் திரிஞ்சாலும், வேலை வெட்டின்னு வர்றப்ப எப்படிப் பிரிஞ்சிடுறோமோ... சினிமா வாழ்க்கையும் அதே மாதிரிதான் ஆகிடுச்சு. பழைய ஆசாபாசங்களை நினைச்சுப் பார்க்க யாருக்குமே இங்கே நேரம் இல்லை. 'அண்ணே... எனக்கு நேஷனல் அவார்டு கிடைச்சிருக்கு'ன்னு ஆசையோடு அவன் என்கிட்ட சொல்வான்னு எதிர்பார்த்தேன். நியூஸ்ல பார்த்துட்டு நான் அவனை வாழ்த்துவேன்னு நினைச்சானோ என்னவோ... அமைதியா இருந்துட்டான். நானும் அமைதியா இருந்துட்டேன். வளர்ந்துட்டானேங்கிறதுக்காக அவனைத் தேடிப் போய் வாழ்த்தச் சொல்றீங்களா? அப்படி எல்லாம் அனுசரிச்சு வாழக் கத்திருந்தா... இன்னிக்கு அமீர் இருக்க வேண்டிய இடமே வேற!"

"மனசுல உள்ளதை இப்படி பளிச்சுனு போட்டு உடைக்கிறதாலதானே பல பேரோட பொல்லாப்புக்கும் ஆளாகுறீங்க?"

" 'நல்லவர்', 'வல்லவர்'னு ஒருத்தரை ஒருத்தர் பாராட்டிக்கிற எத்தனையோ பேட்டிகளைப் படிக்கிறேன். வெளி நாகரிகத்துக்காக அவர்கள் அப்படிப் பேசினாலும், உண்மை என்னங்கிறது அவங்கவங்க மனசாட்சிக்குத் தெரியும். பந்தி வைக்கிற இடத்தில், எதையும் பதுக்கிவைக்கக் கூடாதுன்னு நினைக்கிறவன் நான்.

கௌதம் மேனனோட 'விண்ணைத் தாண்டி வருவாயா' முதல் பாதி பார்த்து ஸ்தம்பிச்சுட்டேன். 'ஒரு காதலை இவ்வளவு அழகியலா இதுவரை யாருமே சொன்னதில்லையே'ன்னு பூரிச்சேன். ஆனா, அதே நேரம் செம்மொழி மாநாட்டுப் பாடலை இயக்கும் பொறுப்பை அவர்கிட்ட கொடுத்ததை என்னால் ஏத்துக்க முடியலை. உடனே, அவரை மொழி வட்டத்துக்குள் நான் கொண்டுவர்றதா நினைச்சுடாதீங்க. கருவேல மரம், கம்பங்கூழ், பத்தாயம், குதிர், பானைச்சட்டி, சும்மாடு, மஞ்சள் தண்ணி, சாமி நடவு, பூப்பு நீராட்டு, பச்சை மட்டை, படையல் சோறுன்னு செம்மொழிப் பாட்டில் தமிழ் மக்களோட அத்தனை அடையாளங்களை யும் சேர்க்காமல்விட்ட ஆதங்கம் அத்தனை தமிழ் இயக்குநர்கள்கிட்டயும் இருக்கு. ஆனா, எதுக்கு பொல்லாப்புனு எல்லாருமே அமைதியாகிடுறாங்க. மனசுல பட்டதைப் பட்டுனு சொல்லக்கூட முடியலைன்னா... அப்புறம் என்ன நான் வெங்காயப் படைப்பாளி?"

"உங்க படத்தில் குத்துப்பாட்டே வைக்காத நீங்கள், 'யுத்தம் செய்' படத்தில் நீத்து சந்த்ராவோடு கெட்ட ஆட்டம் போட்டு இருக்கீங்களே?"

"அது நட்புக்காக நான் செய்த தப்பு. சேரனும் மிஷ்கினும் வற்புறுத்தினாங்க. அவங்களோட பாசத்தைத் தட்ட முடியலை. அந்தப் பொண்ணுகூட போட்டி போட்டு ஆடுற அளவுக்கு நான் சரியான ஆள்னு எப்படி நம்பினாங்கன்னு தெரியலை... ஆடிட்டேன்! அந்த டான்ஸ் ஸீன் எப்படி வந்து இருக்குன்னுகூட இப்போ வரைக்கும் நான் பார்க்கலை. இனி, அப்படி ஒரு தப்பைப் பண்ண மாட்டேன்!"

" 'ஆதிபகவன்' படத்துக்கு ஃபிக்ஸ் பண்ணிவெச்சிருந்த நாயகியை மாற்றிவிட்டு, நீத்து சந்த்ராவையே ரவிக்கு ஜோடி ஆக்கிட்டீங்களே... அந்த அளவுக்கு நீத்துவைப் பிடிச்சுப்போச்சா?"


"உண்மைதான்... எனக்கு நீத்துவை ரொம்பப் பிடிச்சிருக்கு. அதனாலதான், டான்ஸ் ஆடப் போன இடத்துல இருந்து பாங்காக் வரைக்கும் நீத்துவைத் தூக்கிட்டு வந்துட்டேன். 'பிடிச்சிருக்கு'ன்னு எந்தப் பெண்ணைப்பற்றியும் நான் சொன்னது இல்லை. அந்த வார்த்தையை நீத்துவோட திறமை சொல்லவெச்சது. நண்பன் மிஷ்கினுக்கு நன்றி!"

"அடுத்த படத்தில் விஜய்யோடு கூட்டணிபோல..."

"சில விஷயங்கள் தள்ளிப் போறதுகூட நல்லதுக்குன்னு தோணும். என் 'கண்ணபிரான்' கதையும் அப்படித்தான். ரெண்டு பேரும் பேசி இருக்கோம். விஜய்யை எல்லோரும் கமர்ஷியல் ஹீரோவாதான் பார்க்குறாங்க. அவார்டுகளை அள்ளிக் குவிக்கிற அளவுக்கு அழுத்தமான உழைப்பாளியும் அவருக்குள்ள இருக்கான். அந்த உழைப்பாளியின் படமா 'கண்ணபிரான்' அவரோட உயரத்தை ஏற்றிவைக்கும். 'அண்ணா... என்னை எடுத்துக்குங்க... எப்படி வேணும்னாலும் செதுக்கிக்கங்க'ன்னு நிக்கிறார். எதுக்கும் தயாரா இருக்கிற இந்த இயல் பான குணமே அவரை எங்கேயோ கொண்டு போயிடும் பாருங்க!"

"தமிழக அரசியல் அரங்கைக் கவனிக்கிறீர்களா? வரும் தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக விஜயகாந்த் இருப்பாரா?"

"தமிழக அரசியலில் இப்போ விஜயகாந்த்தைத் தவிர்த்துட்டு எதையும் யோசிக்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது. தனி மனிதனாக எதையும் எதிர்கொள்ளும் அளவுக்கு அவர் விஸ்வரூபம் எடுத்திருப்பது எல்லோரையும் மிரளவெச்சிருக்கு. அவருடைய திருமண மண்டபம் இடிபட்டபோதுகூட பின்வாங்காத அவரோட தைரியம் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனா, வரப்போகிற தேர்தலில் விஜயகாந்த்தை சரிகட்ட பெரிய அளவில் பேரம் நடக்கப்போறதா பேச்சு இருக்கு. இத்தனை வருடப் போராட்டங்களை செம தில்லாக் கடந்த விஜயகாந்த், இந்த மாதிரியான பேரத்துக்கு விலை போகக் கூடாது. நிச்சயமா அவர் அப்படிப் போக மாட்டார்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. கடந்த தேர்தலில் அவர் களம் இறங்கினப்ப, சினிமாக்காரங்க ஒருத்தர்கூட அவர் பின்னால நிற்கலை. ஆனா, அதையெல்லாம் சட்டை பண்ணாமல் பா.ம.க-வோட கோட்டையிலேயே இறங்கி ஜெயிச்சுக் காட்டினார் விஜயகாந்த். அந்த தில்லும் தைரியமும் இந்தத் தேர்தலிலும் இருக்கும்... இருக்கணும்!"

தீக்குச்சி திருமா... திகுதிகு தங்கபாலு!


''ராஜபக்ஷேவுக்கு ராஜ மரியாதை கொடுத்த காங்கிரஸ் கட்சியைக் கழற்றிவிட

தி.மு.க. தயங்க வேண்டியது இல்லை!'' - என்று 24.10.10 இதழ் ஜூ.வி. பேட்டியில் உணர்ச்சி பொங்க திருமாவளவன் உறுமி இருந்தார். ''எங்கள் தயவால் எம்.பி-யான திருமாவளவன், அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எதையும் பேசட்டும்!'' என்று அடுத்த (27.10.10) இதழிலேயே பதிலடி கொடுத்தார் கார்த்தி சிதம்பரம். இந்த இரு பேட்டிகளும் சில தொடர் நிகழ்வுகளை ஏற்படுத்த... தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் ஏகத்துக்கும் காரசாரம்! ஜூ.வி-யில் தனது பேட்டி வெளியாவதற்கு முன்பே, கடந்த 20-ம் தேதி வள்ளல்பெருமான் வீட்டு இல்ல நிகழ்ச்சிக்குச் சென்ற கார்த்தி சிதம்பரம், ''இன்னும் இரண்டு மாதங்களில் சிதம்பரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும். இது உறுதி!'' என முழங்கியிருந்தார். பதிலடியாக சிறுத்தைகளும் உறும... சிதம்பரம் ஏரியா சூடாகத்தான் இருக்கிறது.



''இடைத்தேர்தல் வரும் என்றால் என்ன அர்த்தம்? அண்ணன் திருமாவின் உயிருக்கே ஏதும் ஆபத்து வரப் போகிறதா? இப்படியெல்லாம் பேசிவிட்டு கார்த்தி சிதம்பரம் நம் தொகுதியான சிதம்பரத்தைத் தாண்டிப் போக முடியாது!'' என சிறுத்தை நிர்வாகிகள் கொந்தளிக்க... அடுத்த சில நிமிடங்களில் அவர்களைத் தொடர்புகொண்ட திருமாவளவன், ''ஏதாவது சண்டையை ஏற்படுத்தி நம்மைத் தர்மசங்கடத்துக்கு ஆளாக்க வேண்டும் என்பதுதான் சிலரது நோக்கம். அதற்கு வழி வகுத்துவிடாதீர்கள்!'' என உருக்கமாக வேண்டினார். அதனால் கடலூர் மாவட்ட சிறுத்தைகள் உடனே அமைதியாகிவிட்டனர்.

இந்த நிலையில்தான், 'ராஜினாமா செய்யட்டும் திருமா!' என்ற கார்த்தி சிதம்பரத்தின் பேட்டியும் வெளியானது. பேட்டி வெளியான சனிக்கிழமையன்று, சென்னை அசோக் நகர் புதூர் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு செருப்பு மாலை போட்டு யாரோ சில விஷமிகள் அவமரியாதை செய்ததாகப் பரபரப்பு கிளம்பியது. 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் அந்தப் பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் குதித்தனர். விஷயம் தெரிந்து பல மாவட்டங்களிலும் சிறுத்தைகளுக்கு எதிராக காங்கிரஸாரின் சாலை மறியல் நடக்க... தகவல் அறிந்த திருமாவளவன் சற்றும் தாமதிக்காமல் காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.

''ராஜபக்ஷேவுக்கு எதிராக நான் புதிதாக வா பேசுகிறேன்? நாடாளுமன்றத்தில் எனது கன்னிப் பேச்சிலேயே 'இந்திய அரசு, ஈழத் தமிழ் இனத்துக்கு மாபெரும் துரோகம் இழைத்துவிட்டது' என்பதைப் பதிவு செய்தேன். ஆனால், நான் ஏதோ புதிதாக ஈழ விவகாரத்தில் காங்கிரஸை சாடிப் பேசுவதாகச் சொல்லி அனல் கிளப்புவது எந்த விதத்தில் நியாயம்? ராஜீவ் காந்தி சிலையை அவமதித்தவர்களுக்கும், எங்கள் இயக்கத்தினருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உங்கள் கட்சியிலேயே இருக்கும் சிலர்தான் திட்டமிட்டு இந்த விவகாரத்தில் எங்கள் மீது பழி போடுகிறார்கள்!'' என்று கூறியிருக்கிறார் திருமா. அதோடு பீட்டர் அல்போன்ஸிடமும் திருமா போனில் பேச... ''நான் சாலை மறியலில் இருக்கிறேன்!'' என்றாராம் பீட்டர்.

திருமாவின் விளக்கம் குறித்துப் பலரிடமும் கலந்து பேசிய தங்கபாலு, ''அப்படியானால், உடனடியாக நீங்கள் ஓர் அறிக்கை வெளியிடுங்கள்!'' என திருமாவிடம் சொல்லியிருக்கிறார்.உடனே திருமாவும் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டார்.

அன்று மாலையே தி.நகரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கவிஞர் அறிவுமதி, '' காங்கிரஸுக்கு மானம் ரோஷம் இருந்தால்... வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் தனித்து நிற்கட்டும். எங்கள் சிறுத்தைகளையும் தனித்து நிறுத்துகிறோம். சபதம் செய்பவர்கள் இந்த சவாலுக்கு வரத் தயாரா?'' என பொங்கினார்.

அடுத்துப் பேசிய திருமா, ''கக்கன், மரகதம் சந்திரசேகர், பரமேஸ்வரன், இளையபெருமாள் என காங்கிரஸின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட எனது பாட்டன்கள் நிறைய பேர். அப்படி இருக்க, காங்கிரஸைக் கண்டிக்க எனக்கு உரிமை இருக்கிறது. தமிழக அரசியலில் நாங்கள் தவிர்க்க முடியாத சக்தி என்பதை எல்லோருக்கும் சொல்லிக் கொள்கிறோம்!'' என்றார்.

அதற்கான விளைவுகள் அடுத்த நாளே தெரிந்தது. ''அறிக்கை விட்டால் எல்லாம் சரியாகிவிடும்!'' எனச் சொன்ன தங்கபாலுவே திருமாவுக்கு எதிராகத் தாண்டவம் ஆடத் தொடங்கினார். ''திருமாவளவனை அடையாளப்படுத்தியதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூப்பனார்தான். காங்கிரஸ் தயவில் வெற்றி பெற்ற அவர், காங்கிரஸைப் பற்றி இனியும் அவதூறாகப் பேசக் கூடாது!'' என தடாலடி காட்டினார்.

தி.மு.க-வின் நிலைப்பாடு வெளிப்படையாகத் தெரியாத நிலையில்... இந்த விவகாரம் குறித்துப் பேசும் முக்கியப் புள்ளிகள் சிலர், '' 'கருணாநிதி சொல்லித்தான் திருமா காங்கிரஸுக்கு எதிராகப் பேசினார்' என்று சிலர் டெல்லிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்கள். இதை உணர்ந்த கருணாநிதி, திருமாவிடம், 'உங்கள் பிரச்னையை நீங்களே தீர்த்துக்கொள்ளுங்கள்!' என்று சொல்லி விட்டாராம். தேர்தல் நேரத்தில் ஈழ ஆதரவுகொண்ட சிறுத்தைகள் கட்சியின் ஆதரவை இழந்துவிடக் கூடாது என்றும் நினைக்கிறார் கருணாநிதி. ஆனாலும், இந்த நேரத்தில் அவர் சிறுத்தைகளுக்காக இறங்கி வந்து பேசி... காங்கிரஸின் கோபத்தை வாங்கிக்கொள்ளவும் தயாராக இல்லை!'' என்கிறார்கள்.

ஜூ.வி. நேர்காணல் நகலோடு சோனியாவுக்கே விளக்கக் கடிதம் எழுதி உள்ளாராம் திருமா. ''அதையும் மீறி காங்கிரஸ் தரப்பில் சிக்கல்கள் வெடிக்குமேயானால், தாராளமாகக் கூட்டணிக்கு கும்பிடு போட்டுவிட்டு அண்ணன் வெளியேறிவிடுவார்...'' என்கிறார்கள் தம்பிகள்.

பார்க்கலாம்... க்ளைமாக்ஸ் எப்படித் திரும்புகிறது என்று!


''முதல்வர் கருணாநிதிக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திருமணப் பத்திரிகை

அளிக்கும் புகைப்படத்தை எடுத்து வைத்திரும்...'' - எஸ்.எம்.எஸ். அனுப்பினார் கழுகார்.

''போன இதழிலேயே ஜூ.வி-யில் பிரசுரம் ஆன படம்தானே அது!'' என்று பதில் அனுப்பிய சில நிமிடங்களில் நேரில் வந்துவிட்ட கழுகார், ''இந்தப் படத்தை பத்திரிகைகளில் சில நிமிடங்கள் உற்றுப் பார்த்துவிட்டு, கட்சியின் படுசீனியர் ஒருவரிடம் வித்தியாசமாக கமென்ட் அடித்தாராம் ஜெயலலிதா!'' என்றார். ''முதல்வர் குடும்ப சுப நிகழ்வு... இதில் கமென்ட் அடிக்க என்ன இருக்கிறது?'' என்றோம்.

''ஜெயலலிதா கூறியது... 'இதை எல்லாமா செய்தித் துறை சார்பில் மீடியாக்களுக்கு அனுப்புவார்கள்! மணமகனின் அப்பா கொண்டுபோய், தாத்தாவுக்கு பத்திரிகை வைக்கிறார். 'என் பேரனுக்குக் கல்யாணம்'னு அந்த தாத்தாவேதான் எல்லாரையும் வரவேற்று பத்திரிகையே அச்சடித்து இருக்கிறார். அவர் அழைப்பு விடுக்கும் பத்திரிகையை அவரிடமே கொடுத்து, அதை அரசாங்கமே ரிலீஸ் பண்ணுவது என்ன லாஜிக்?' என்பதுதானாம்!''



''ம்..!''

''இன்னொரு லாஜிக்கும் சொன்னாராம் ஜெ.! 'நம் ஊரில் பேரனுக்குக் கல்யாணம் என்றால், மூன்றாம் மனிதர்போல தாத்தாவுக்குக் கொண்டு போய் பத்திரிகை கொடுக்க மாட்டாங்க. கல்யாணத் தம்பதி தாத்தாவிடம் போய் ஆசி வாங்குவதுதான் பொதுவான வழக்கம்' என்றாராம்!''

''இதையெல்லாம்கூட அம்மையார் யோசிக்கிறாரா?''

''அடுத்ததும் தோட்டத்து செய்திதான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு டி.டி.வி.தினகரனுக்காகத் தோட்டத்துக் கதவு திறந்து இருக்கிறது. மனிதர் வேர்த்து விறுவிறுத்து ஓடினார். எதிர்பார்த்தது மாதிரி இல்லாமல் கனிவாகப் பேசினாராம் ஜெ. 'உங்கள் மீது அதிகமான நம்பிக்கை வைத்திருந்தேன். அதை நீங்கள் சரியாக உணர்ந்து செயல்படவில்லை என்ற வருத்தம் எனக்கு இருந்ததால், ஒதுக்கிவைத்தேன். ஆனால், அடுத்தடுத்து வந்தவர்களும் எனக்கு நம்பிக்கை ஏற்படும் வண்ணம் செயல்படவில்லை. இன்னொரு வாய்ப்பு கொடுத்தால், ஒழுங்காக நடந்துகொள்வீர்களா?' என்று அம்மா கேட்டதும்... உற்சாகம் தாளமாட்டாமல் தலையாட்டினாராம் டி.டி.வி.! அநேகமாக சட்டசபைத் தேர்தலின் மெயின் லகான் இவர் வசம் ஒப்படைக்கப்படலாம்.''

''ஆனால், தோட்டத்தில்தான் எதுவும் நிரந்தரம் இல்லையே?''


''அதுவும் நிஜமே! முழு பூஸ்ட் ஏற்றிய உற்சாகத்துடன் வெளியே கிளம்பிய தினகரனிடம், 'மெமரியை நல்லா வளர்த்துக்கோங்க' என்று சொல்லி அனுப்பினாராம் ஜெ.!''

''என்ன அர்த்தமோ இதற்கு?''

''மாவட்டம்தோறும் பயணப்பட்டு, நல்ல வேட்பாளர்களை அடையாளம் காட்டுவது முதல்... தேர்தல் சுற்றுப் பயணங்கள் வரை அனைத்துமே தினகரன் வசம் ஒப்படைக்கப்படலாம் என்கிறார்கள். பிரசாரத்தின்போது, ஊர் வாரியாக கட்சி நிர்வாகிகளை நினைவில் நிறுத்தித் தட்டியும் குட்டியும் வேலை வாங்க வேண்டுமென்று அப்படி சொல்லியிருக்கலாம்!''

கழுகாருக்கு முந்திரி பக்கோடா நீட்டினோம். அதன் பிறகு டீ.

''சேலம் ஆறு பேர் கொலையில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ் கைதாகி சிறையில் இருக்கிறார். கடந்த 22-ம் தேதி, சென்னையில் இருந்து சேலம் வந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், நேராக மத்திய சிறைச்சாலைக்கு சென்று சுரேஷை சந்தித்துப் பேசினார். ஆறுதல் வார்த்தைகளைச் சொன்னாராம். அன்று மாலை பூலாவரியில் அமைச்சரின் வீட்டில், 'தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்னு ஆளாளுக்கு ஆட்டம் போட்டீங்க இல்லை... இப்போ என்னாச்சு பார்த்தீங்களா..? இவனுக்கெல்லாம் எதுக்கு இந்த வேலை? இனி யாராவது என்னோட பேரைச் சொல்லி... எங்காவது... ஏதாவது பிரச்னை பண்றீங்கன்னு என் காதுக்கு வந்தா... நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்!' என்று கொதித்துத் தள்ளிவிட்டாராம் அமைச்சர்.

'கொலைக் குற்றம் சாட்டப்பட்டு இருப்பவரை, தேசியக் கொடியும், சைரனும் வைத்த அரசு காரில் ஜெயிலுக்குள் போய், வீரபாண்டி ஆறுமுகம் சந்தித்தது விதிமுறை களையும், ஜனநாயக மரபையும் மீறிய செயல்!' என ஈ.வி.கே.எஸ். இளங்கோவனில் ஆரம்பித்து வழக்கறிஞர்கள் பலரும் குரல் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.''

''அமைச்சரின் பதில் என்னவாம்?''

''சொந்தத் தம்பி மகனைப் பார்க்கக்கூட உரிமை இல்லையா என்று கேட்கிறார்களாம் அவர் தரப்பில்...'' என்றவர், அடுத்த செய்திக்குத் தாவினார்.

''ராகுல் காந்தியின் பி.ஏ-க்களில் ஒருவரான முகேஷ் குமார் தன் மனைவியுடன் கடந்த ஒரு வார காலமாகத் தென் இந்தியாவில் ஆன்மிகச் சுற்றுலாவில் இருக்கிறார். கடந்த புதன்கிழமை திருப்பதியில் ஆரம்பித்த இவரது தீர்த்த யாத்திரை... காளஹஸ்தி, திருநின்றவூர், சமயபுரம், ஸ்ரீரங்கம், மதுரை, சுசீந்திரம், கன்னியாகுமரி, திருச்செந்தூர் என நீண்டு, இந்த திங்கட்கிழமை ராமேஸ்வரத்தில் நிறைவடைந்தது. முக்கிய ஸ்தலங்களில் ஹோமங்களில் பங்கேற்ற முகேஷ், அனைத்துக் கோயில்களிலும் சோனியா மற்றும் ராகுல் பெயர்களில் ஸ்பெஷல் அர்ச்சனைகள் செய்யத் தவறவில்லை. முகேஷின் விசிட் காங்கிரஸ் தலைவர்கள் யாருக்கும் தெரியாது. கிட்டத்தட்ட ரகசிய மாகத்தான்! இந்த விசிட் முழுக்க முழுக்க முகேஷின் பெர்சனல் என்று சொல்லப்பட்டாலும், சோனியா மற்றும் ராகுல் பெயர்களில் சிறப்பு ஹோமங்களும் அர்ச்சனைகளும் நடத்தப்பட்டதாம்.''

''ராகுலை முன்வைத்து தமிழ்நாட்டில் ஏதேதோ நடந்துகொண்டே இருக்கிறதே?''

''காங்கிரஸ் பாத யாத்திரை வரும் 29-ம் தேதி ஈரோட்டை அடைகிறது. அன்று ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். சில நாட்களாக டெல்லி பாதுகாப்பு அதிகாரிகள் வந்து முகாம் இடுவதைப் பார்த்தால், ராகுல் அங்கு திடீர் பிரசன்னம் ஆகிப் பேசுவாரோ என்ற சந்தேகம் வலுப்படுகிறது. அன்றைய மேடை கொஞ்சம் அனல் கிளப்பும் மேடையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.''



''ராகுலை எதற்கு நடிகர் ராதாரவி சந்தித்தாராம்?''

''தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 60-வது ஆண்டு விழாவுக்கு அழைக்கப் போனாராம். அப்போது தமிழ் நாட்டு நிலவரங்களையும் ராகுல் கேட்க... 'ஜெயலலிதா மேடம் மறுபடியும் ஜெயிப்பாங்க.' என்று உறுதியாகச் சொன்னாராம் ராதாரவி. 'மேடம் ஜெயிப்பாங்களா!'என்று ஆச்சர்யப்பட்டாராம் ராகுல். 'மேடம்' என்று அவர் உச்சரித்தது பிறகு வெளியே குறிப்பிட்டுப் பேசப்படுகிறது.''

''அடுத்தபடியாக ராதாரவியை நேரில் அழைத்து ஜெ. சந்தித்திருக் கிறாரே?''


''அவர், காங்கிரஸ் கட்சியில் இணையப்போகிறார் என்று கிளம்பிய வதந்தி கார்டனை எட்டியது. உடனே கார்டன் கதவு திறந்தது. 'அ.தி.மு.க-வில் தானே இருக்கீங்க... இந்தாங்க புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் கார்டு.' என்று கொடுத்தாராம் ஜெயலலிதா. 'பழசை எல்லாம் மறந்துடுங்க. டிசம்பரில் இருந்து சுற்றுப்பயணம் போக ரெடி ஆகிடுங்க!' என்றும் உத்தரவு போட்டாராம். உற்சாகமாகக் கிளம்பிவிட்டார் ராதாரவி! மறைந்த எஸ்.எஸ்.சந்திரன் இடத்தை எரிமலையாக மேடையில் நிரப்பச் சொல்லி இவருக்கு உத்தரவாகுமாம்...'' என்ற கழுகார்,

''பா.ம.க. செயற்குழுக் கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் திடீரென கூட்டப்பட்டது. பாட்டாளி சொந்தங்கள் பதறிப் போய்தான் கூடினர். பா.ம.க-வின் செல்வாக்கான தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து அங்கு கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். அதன் நிறைகுறைகளைப் பற்றிப் பேசிய ராமதாஸ், நெய்வேலி விவகாரத்தை விடாமல் போராடி வெற்றி பெற்றால்... பா.ம.க-வின் செல்வாக்கு இன்னும் உயரும் என்றாராம். கடைசியாகக் கூட்டணி பற்றி பேச்சுக் கிளம்பியதாம்.

''சிரித்துக் கொண்டே ராமதாஸ், 'அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம், நான் பார்த்துக் கொள் கிறேன்!' என்றாராம். 'பேசி முடித்துவிட்டார் ஐயா' என்று தோட்டத்து வாசலில் நின்று சொல்லிக் கலைந்திருக்கிறார்கள் சொந்தங்கள்!'' என்றபடி கழுகார் பறந்தார். அவரது வார்த்தைகளில் க்ளூ இருந்ததால் நாமும் வழிமறித்துக் கேள்வி கேட்கவில்லை!

Wednesday, October 27, 2010


"தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சியை கலைஞர் விலக்கவேண்டும்' என்று விடுதலைசிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வீசிய குண்டு, கதர்ச்சட்டையினரை கொதிப்படைய வைத்தது. திருமாவளவனின் கருத்தை நம்மிடம் கண்டித்த கார்த்தி சிதம்பரம்,’’""காங்கிரஸை விமர் சிக்க திருமாவளவனுக்கு தகுதி இல்லை. காங்கிரஸ் ஆதரவால் எம்.பி.யான அவர் தனது பதவியை முதலில் ராஜினாமா செய்துவிட்டு அதன்பிறகு விமர்சிக்கட்டும்''’’என்று பதிலடி தந்தார்.

இதற்கு நம்மிடம் பேசிய திருமாவள வன்,’""எனது முப்பாட்டன்கள் வளர்த்த கட்சி காங் கிரஸ். அதனால் அக்கட்சியை விமர்சிக்க எனக்கு உரிமை உண்டு. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றியில் விடுதலைசிறுத்தைகளின் உழைப் பும் வாக்கும் உண்டா? இல்லையா? வாக்குச்சாவடி முகவர்களே (பூத் ஏஜெண்ட் ) சிறுத்தைகள்தான் இருந்தனர். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பதில் சொல்லட்டும். பதவியை ராஜினாமா செய் கிறேன்''’’என்று எதிரடி கொடுத்தார்.
இந்த சூழலில்தான், சென்னை அசோக்நகர் பகுதியில் இருக்கும் ராஜீவ்காந்தி சிலைக்கு சிலர் 24-ந் தேதி இரவு செருப்பு மாலை அணிவிக்க... மறு நாள் காலையில் இந்த விசயம் அறிந்து ஏகத்துக்கும் கொந்தளித்தனர் சென்னை மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள். ப.சிதம்பரம் அணியைச்சேர்ந்த கராத்தே தியாகராஜன், வாசன் அணியைச் சேர்ந்த சைதைரவி, இல.பாஸ்கரன் உள்ளிட்டவர்களின் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட கதர்ச்சட்டை யினர் அசோக் நகரில் திரண்டு,’’""திருமாவளவனின் தூண்டுதலின் பேரிலேயே அவரது கட்சியினர் ராஜீவ் சிலையை அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள். 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். இல்லையேல் போராட்டம் கடுமையாக இருக்கும்''’’என்று கூறி மறியலில் ஈடுபட.. சுமார் 3 மணி நேரம் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுவையில் பல இடங்களில் திருமாவை கண்டித்து சாலை மறியலில் குதித்தனர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் தொண்டர்களும்.


இதற்கிடையே தமிழகத்திலிருந்து சோனியாவுக்கும், ராகுலுக்கும் ராஜீவ் அவமதிக்கப்பட்ட விவகாரம் பற்றி மெயில்கள் பறந்தன. அதே சமயம் தகவல் அறிந்த ப.சிதம்பரமும் இது குறித்து சோனியாவின் கவனத்துக்கு கொண்டு சென்றதோடல்லாமல், காங்கிரஸ் குறித்து திருமாவளவனின் சமீபத்திய பேட்டிகளை சுட்டிக் காட்டிவிட்டு விடுதலைசிறுத்தைகளைப் பற்றி புகாரும் தெரிவித்துள்ளார். இதனை சீரியஸாக எடுத்துக்கொண்ட சோனியா டென்ஷனாகி, புதுவை காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான நாராயணசாமியிடம் விடுதலை சிறுத்தைகளை கண்டித்து தீர்மானம் போடச்சொல்லி உத்தரவிட... பதட்டமான நாராயணசாமி உடனடியாக புதுவை காங்கிரஸ் கூட்டத்தைக் கூட்டி, "சென்னையில் ராஜீவ்காந்தி சிலைக்கு செருப்பு மாலை போட்டவர் களை கலைஞர் அரசு கண்டுபிடித்து கைது செய்யவேண் டும்' என்று தீர்மானம் நிறைவேற்றினார். இந்த தீர் மானத்தை கலைஞருக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

மேலும் "கடலூர், விழுப்புரம், அரியலூர் உள் ளிட்ட சிறுத்தைகள் இருக்கும் மாவட்டங்களில், இந்திராகாந்தி மற்றும் ராஜீவ்காந்தி சிலைகளை கடந்த காலங்களில் இவர்கள் அவமதித்திருக் கிறார்களா? அது குறித்து ஏதேனும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? ராஜீவ்காந்தி பத்தி திருமாவளவன் என்னென்ன பேசியிருக் கிறார்?' என்பது பற்றியெல்லாம் ஒரு ரிப்போர்ட் வேண்டுமென மத்திய உளவுத்துறையினரை கேட்டுக்கொண்டிருக்கிறார் சோனியாகாந்தி. இதனால் காங்கிரஸ்-விடுதலை சிறுத்தைகள் விவகாரம் அரசியலில் ஏகத்துக்கும் பரபரப்பாகி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ராஜீவ் சிலைக்கு செருப்பு மாலை போட்டதாக தி.நகர் பகுதி விடுதலை சிறுத்தைகள் பொறுப்பாளர்கள் பிரகாஷ், சந்தோஷ்குமார் ஆகியோரை கைது செய்திருக்கிறது போலீஸ். இந்த விவகாரம் குறித்து திருமாவளவனின் தனிச்செயலாளர் பாவலனிடம் கேட்டபோது,’’""தி.மு.க. கூட்டணியிலிருந்து விடுதலை சிறுத்தைகளை வெளியேற்றுவதற்காகவும் தமிழக காங்கிரஸின் தலைவராக வருவதற்காகவும் கார்த்திசிதம்பரம் திட்டமிடுகிறார். அதற்காகத்தான் அவரது தூண்டுதலின் பேரில் கராத்தே தியாகராஜன் தலைமையிலான ஒரு குழு... ராஜீவ் சிலைக்கு செருப்பு மாலையை போட்டுவிட்டு பதட்டத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த உண்மை காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கும் தெரியும். காங்கிரஸ் தலைவர்களையும் அவர்களது சிலைகளையும் எங்கள் தலைவர் திருமா எப்போதும் அவமதித்ததில்லை. தனிப்பட்ட முறையில் விமர்சனங்களையும் செய்ததில்லை. தி.மு.க-சிறுத்தைகள் கூட்டணியை உடைக்கும் கார்த்திசிதம்பரத்தின் சதியை காங்கிரஸ் தொண்டர்கள் புரிந்துகொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டவர் கள் இருவரும் எங்கள் கட்சியினர்தான். அவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது''’’என்கிறார் ஆவேசமாக.

இந்த குற்றச்சாட்டு குறித்து கராத்தே தியாகராஜனிடம் கேட்டபோது,’’ ""ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டபோது அந்த உடலை தூக்கிச் சுமந்தவன் நான். அப் போது நான் போட்டிருந்த ரத்தம் தோய்ந்த சட்டையை இன்னமும் பாதுகாத்து வரு கிறேன். நாங்களா ராஜீவ் சிலையை அவ மதிப்போம்? தி.மு.க. கூட்டணியிலிருந்து சிறுத்தைகளை வெளியேத்தணும்னா அதற்கு நிறைய வழிகள் இருக்கு.

தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணிக்கு ஜெயலலிதாதான் பொது எதிரி. அந்த தீய சக்தி மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரக்கூடாதுங்கிறதில் தெளி வாக இருக்கிறோம். ஆனால் அந்த தீய சக்தியோடு கூட்டணி வைத்துக் கொள்ள வே திருமாவளவன் திட்டமிடுகிறார். அதனால் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேற அவருக்கு ஒரு காரணம் தேவை. அதற்கு காங்கிரஸை சீண்டுவதன் மூலம் காரியம் சாதிக்கப்பார்க்கிறார். காரணம்... தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது. காங்கிரஸை வெளியேற்ற கலைஞரை வலியுறுத்தி னால் அதை அவர் பரிசீலிக்க மாட்டார். அதை காரணமாக வைத்தே நாம் வெளியேறிவிடலாம்னு திட்டமிட்டு காங்கிரஸ் தொண்டர்களுக்கு கோபத்தை வரவழைக்கவே ராஜீவ் சிலையை அவமதிக்க தூண்டியுள்ளார் திருமா வளவன்.



"அ.தி.மு.க. கூட்டணிக்காக யார் யாரிடம் தூது போகிறார்ங்கிறது எனக்கு தெரியும். அதனால் தன்னுடைய அநாகரிக அரசியலுக்காக இனியும் காங்கிரஸை சீண்டிப் பார்த்தால்... அதன் விளைவுகளை தாங்கமாட்டார்''’’என்று பதிலுக்கு எகிறுகிறார் தியாகராஜன்.

நடந்துள்ள சம்பவத்தை தொ டர்ந்து திருமா மீது கடும் கோபத்தில் இருக்கும் காங்கிரஸில் உள்ள ஒரு குரூப்,’""காங்கிரஸை நெருக்கடிக்குள் தள்ள கலைஞரே திருமாவை பேச வைத்து ஆழம் பார்க்கிறார்''’’என்று பிரச்சாரம் செய்கிறது.

அறிவாலயமோ, ""நினைப்பதை யெல்லாம் பேசும் கும்பலைப் பற்றி என்ன சொல்வது?'' என்கிறது.

Tuesday, October 26, 2010

என் மனைவி! -ஹாரிஸ் ஜெயராஜ்


''எப்படி சார் இவ்வளவு தூரம் நாளையெல்லாம் சரியா கணிச்சு வர்றீங்க. இன்னிக்கு (18.10.2010) எங்க திருமண நாள். பதினோரு வருஷத்துக்கு முன்ன... இதே நாள்லதான் சுமா, மிஸஸ் ஹாரிஸ்னு ஆனாங்க!''

- விசேஷ நாளின் சந்தோஷம், ஹாரிஸ் ஜெயராஜின் வார்த்தைகளை இன்னும் ருசியாக்கியது!

தன் வாழ்வின் வரமாக அவர் கொண்டாடும் தன் மனைவி பற்றி, 'என் மனைவி'க்காக பேசினார் ஹாரிஸ்...


''அப்போ நான் பிரபலமான கீ போர்டு பிளேயர். இந்தியாவுல இருக்கற எல்லா இசையமைப்பாளர்கள்கிட்டயும் வாசிச்சுட்டிருந்தேன். ஒருமுறை, இசையமைப்பாளர் சாதுபொக்கிலாவுக்காக வாசிக்கறதுக்கு பெங்களூரு போயிருந்தேன். அப்போ அவர், 'இவங்க சுமா... நல்லா ஹம்மிங் பாடுவாங்க ஹாரிஸ்'னு எனக்கு அறிமுகப்படுத்தினார். அவங்கதான் என்னவளா ஆகப்போறவங்கனு, அப்போ எனக்குத் தெரியாது!

முதல் தடவை சுமாவை மீட் பண்ணினப்போ, மின்னல் அடிக்கல. ஆனா, சின்னதா ஒரு மத்தாப்பு ஒளி. தொழில்ரீதியா பல பெண்களை சந்திச்சிருக்கேன். ஆனா, இவங்கள சந்திச்சப்ப மட்டும் அந்த ஒளி பரவுச்சு. அன்னிக்கு ஒரு சம்பிரதாய புன்னகையோட ரெண்டு பேரும் ஒரு வார்த்தைகூட பேசிக்காம பிரிஞ்சுட் டோம்.

சாயங்காலம் பெங்களூரு 'ஸ்டாப் அண்ட் ஷாப்'புக்கு ஷாப்பிங் போயிருந்தேன். பெண்களுக்கான பகுதியில என் தங்கைகளுக்கு பொருட்கள் வாங்கப் போனப்போ, அங்க நின்னுட்டு இருந்தாங்க சுமா. மனசுக்குள்ள ஒருவித குறுகுறு சந்தோஷம். புன்னகை மூலமா, ரெண்டு பேருமே அதை வெளிப்படுத்திக்கிட்டோம். 'சிஸ்டர்சுக்காக வாங்க வந்தேன்'னு சொன்னேன். நான் பார்த்துக்கிட்டிருந்த டிரெஸ்களை எல்லாம் வாங்கி, கீழ வெச்சுட்டு, 'நான் செலக்ட் பண்ணித் தர்றேன்'னு நிறைய நேரம் செலவழிச்சு, தேர்ந்தெடுத்துக் கொடுத்தாங்க.

ஏன்னு தெரியல... 'உங்களுக்கும் ஏதாச்சும்...'னு சொன்னேன். 'நீங்களே எடுத்துக் கொடுங்க'னு சொன்னாங்க. 'சான்சுடா ஹாரிஸ்...'னு சுதாரிச்சேன். 'ஹெச்' டாலர் போட்ட செயினை வாங்கி, அவங்க பார்க்காம 'பேக்' பண்ணி, கையில கொடுத்தேன். அடுத்த நாள்... ஸ்டூடியோவுக்கு வந்தப்போ, 'ரியாக்ஷன் என்னவா இருக்கும்?!'னு காத்திருந்தேன். வாய்ஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் 'ஆட்டோகிராஃப் ப்ளீஸ்'னு எங்கிட்ட வந்தாங்க. என்னிடம் ஆட்டோகிராஃப் கேட்ட முதல் பெண் சுமாதான். கையெழுத்தோட என் போன் நம்பரையும் சேர்த்து எழுதினேன்.


நாட்கள் உருண்டுச்சு. சுமாகிட்ட இருந்து தகவல் எதுவும் வரல. 'தக்ஷக்'னு ஒரு இந்திப்படம். ஏ.ஆர்.ரஹ்மான் இசை. என் செல்போனை ரஹ்மான் பக்கத்துல வெச்சுட்டு, சாப்பிடப் போயிட்டு வந்தேன். 'உனக்கு ஒரு போன் வந்தது. நான் எடுத்துப் பேசினேன். யாரோ ஒரு பெண் பேசினாங்க'னு ரஹ்மான் சொன்னார். 'என் தங்கச்சியா இருக்கும்'னேன். 'அது மாதிரி தெரியலை'னார் அவர்.

மறுபடியும் வந்தது அந்த போன். 'ஏன் எனக்கு 'ஹெச்' இனிஷியல் டாலர் கொடுத்தீங்க?'னு குரல்ல பதற்றம் இல்லாம அமைதியா கேட்டாங்க சுமா. 'சும்மாதான்!'னு சொன்னேன். அது சும்மா இல்லைனு சுமாவுக்குப் புரிஞ்சது. அப்புறம் வாரத்துக்கு ஒரு நாள், தினமும் ஒரு தடவை, தினமும் பல தடவைனு பேச்சுகள் நீண்டுச்சு. நாங்க சந்திச்ச 90 நாட்களுக்குப் பிறகு, எங்க திருமணம் நடந்தது.




நான் கிறிஸ்டியன்... என் மனைவி தெலுங்கு பிராமின். எங்க வீட்டுல சுமாவை பார்த்துட்டு, 'டபுள் ஓ.கேடா!'னு சொல்லிட்டாங்க. ஆனா, சுமா வீட்டுல நான் பாஸ் மார்க் வாங்கல போல. அந்த பதினெட்டாம் தேதி காலையில ஃப்ளைட்ல சென்னை வந்த சுமா, மாலை என் மனைவியானாங்க. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவங்க வீட்டுல யாருமே கல்யாணத்துக்கு வரல.

கல்யாணமான புதுசுல தெலுங்குப் பெண் சுமாவும், தமிழ்ப் பையன் ஹாரிசும் ஆங்கிலத்துலதான் பேசிக்குவோம். அப்புறம் மொழியில இருந்து மனசு வரைக்கும் ரெண்டு பேரும் பரஸ்பரம் பழகிக்கிட்டோம். எந்த நிர்ப்பந்தமும் இல்லாம தன் பெயரை 'ஜாய்ஸ்'னு மாத்திக்கிட்டாங்க சுமா. முழுமையான தன்னிறைவும், முழுமையான சமர்ப்பணமும் அவங்களோட ஸ்பெஷல். சர்ச் நடைமுறைகள்லகூட தன்னை இயல்பா புகுத்திகிட்ட அவங்களைப் பார்த்து நான் பலமுறை வியந்திருக்கேன், பூரிச்சிருக்கேன்.

ஒவ்வொரு கணமும் எனக்காக வாழறவங்க என் மனைவி. என் தங்கைகள் திருமணத்தை தாயைப் போல பொறுப்பேற்று நடத்தினாங்க. எங்க குடும்பத்துல எல்லாரோட பிறந்த நாளையும், திருமண நாளையும் ஞாபகம் வெச்சு கொண்டாடற அன்பு மனசுக்காரி சுமா. பெத்த தாயைவிட என்னை பூரணமா புரிஞ்சுக்கிட்டவங்க அவங்க. இதை நான் எங்கம்மாகிட்டயே பல தடவை சொல்லி பெருமைப்பட்டிருக்கேன். 'ஆமாண்டா!'னு சிரிக்கற மனசு எங்கம்மாவுக்கு.

சாப்பாடுல இருந்து டிரெஸ் வரைக்கும் நான் முழுக்க முழுக்க அவங்க கன்ட்ரோல். சமீப காலமா ஹேர்ஸ்டைல், ஆடைகள்னு நான் நிறைய மெருகேறி இருக்கறதா நிறைய பேர் பாராட்டியிருக்காங்க. அத்தனை பெருமையும் என் மனைவி சுமாவுக்குதான் சமர்ப்பணம்.

என்னதான் பிஸியா இருந்தாலும், கார்ல முன் ஸீட்ல அவங்கள வெச்சுட்டு டிரைவ் பண்ற நேரத்துலயாச்சும் தினமும் பத்து நிமிஷமாவது தனிமையில பேசிடுவேன். 'நேத்தி நம்ம வீட்டுக்கு வந்திருந்த கெஸ்ட்டை அருமையா ரிஸீவ் பண்ணப்பா நீ'னு தட்டிக் கொடுப்பேன். அவங்ககிட்ட சேர்க்க வேண்டிய இந்த வார்த்தைகள தவறாம சேர்க்கறதால நாம குறைஞ்சுடப் போறதில்ல. இல்லறத்தோட மந்திரம் இந்த வார்த்தைகள்தான்னு நம்பறேன் நான்.

நிக்கோலஸ், நிகிதானு ரெண்டு குழந்தைங்க. சண்டையோ, மனத்தாங்கலோ... நானும் என் மனைவியும் அதை தனியறையில முடிச்சுக்குவோம். குழந்தைகளுக்கு... எப்பவும் புன்னகைச்சுட்டே இருக்கற அப்பா, அம்மாவை மட்டுமே தெரியும். நான் வீட்டுக்கு வர்ற நேரம் என் குழந்தைங்க தூங்கிட்டு இருப்பாங்க. அவங்க ஸ்கூல் கிளம்பற வரைக்கும் நான் அயர்ந்த தூக்கத்துல இருப்பேன்.



எப்பவும் அவங்களை தவறவிட்டுட்டே இருக்கற மாதிரி வேலைச் சுமை எனக்கு. ஆனா, பாடல் கம்போஸ் பண்ண வெளிநாடு போகற சூழ்நிலை வந்ததுனா, அவங்களையும் அள்ளிட்டுப் போயிடுவேன். வெளிநாட்டுல நாலு மணி நேரம் நம்ம மூளையை செலவழிச்சு வேலை செஞ்சா போதுமானதா இருக்கும். மிச்ச நேரம் முழுக்க மனைவி, குழந்தைங்ககிட்ட கிட்டத்தட்ட அடிமையாவே கிடப்பேன். அடுத்த ஆறு மாசத்துக்கு அவங்களுக்கும், எனக்கும் அந்த நாட்கள் தாங்கும்.

எவ்வளவு வேலையிருந்தாலும் ஒரு அப்பாவா குழந்தைகளுக்கான என் பொறுப்புகள்ல எந்த சமரசமும், தாமதமும் செய்ய மாட்டேன். அவங்க ஆண்டுவிழா நிகழ்ச்சியில கடைசி வரிசையில சத்தமில்லாம என் மனைவியோட அட்டண்டன்ஸ் போட்டுடுவேன். பள்ளியைப் பொறுத்தவரைக்கும் என் குழந்தைங்களுக்கு அப்பா. அங்க நான் வேற எந்த அடையாளத்தையும் அனுமதிக்கறதில்ல.

இப்போ சுமாவோட அம்மா, அப்பாவும் எங்களை ஆசீர்வதிச்சு, வீட்டுக்கு வர ஆரம்பிச்சுருக்காங்க. குழந்தைங்கள ஆசை தீர கொஞ்சறாங்க. எல்லாமே ஆண்டவனோட கட்டளைப்படியே நடக்குது. வீட்டுல என் சுமாவோட கட்டளைகளை நான் எதிர்கொண்டு நடக்கறேன்.

நல்ல மனைவி, நல்ல குடும்பத்தோட பெரும் அங்கம். என் சுகதுக்கங்களை சுமாதான் நிர்ணயிக்கறாங்க. எங்க எல்லாரோட சுகதுக்கங்களை ஆண்டவர் நிர்ணயிக்கிறார்!

லட்சுமி என்றோர் ஆலமரம்!


சன் டி.வி-யில் வரும் 'விகடன் டெலிவிஸ்டாஸ்'-ன் 'தென்றல்' சீரியலில் பேத்தி படும் வேதனையைப் பார்த்து, புயலாக சீறும் பாட்டியைப் பாராட்டாத தமிழ் சீரியல் நேயர்களே இல்லை. அசதி வருத்துகிற இந்த எண்பது வயதிலும், அசராமல் நடித்து அசத்தி வருகிற எஸ்.என்.லட்சுமியின் நினைவு அடுக்குகளில் பதிந்து கிடக்கின்றன திரை உலகில் அவரின் மூன்று தலைமுறை அனுபவங்கள், பொக்கிஷமாக!

சூப்பர் பாட்டியின் பேச்சு முழுக்க நிரம்பியிருந்தது உற்சாகம்; திருமணமே செய்துகொள்ளாத அவர் வாழ்க்கை நெடுக நிரம்பியிருந்தது தியாகம்!



''விருதுநகர் பக்கத்துல சென்னல்குடிங்கிற சின்ன கிராமம்தான் சொந்த ஊர். அப்பா நாராயண தேவர், ராஜா கம்பளத்து நாயக்கர் அரண்மனையில நிர்வாகம் பண்ணிட்டிருந்தாரு. எங்க வீட்டுல ரெண்டு பொண்ணு, பதினோரு ஆணுனு மொத்தம் 13 புள்ளைங்க (அட, 13-ம் ஆண்டு சிறப்பிதழ்ல மிஸ்ஸாயிட்டீங்களே!). நான்தான் கடைக்குட்டி. நான் பொறந்தப்போ, அப்பாவுக்கு வேலை போயிடவே... வீட்டுல ஒரே வறுமை. சாப்பாட்டுக்கே வழி இல்லாம, பஞ்சம் பிழைக்க பக்கத்து டவுனுக்கு வந்தோம். அப்பா, எங்கள அநாதரவா விட்டுட்டுப் போயிட, அம்மாவால எங்க பதிமூணு பேரோட பசியை ஆத்த முடியல. அப்ப பதினஞ்சு வயசிருக்கும். குடும்பச் சூழ்நிலைய நினைச்சு, ரோட்டுல நின்னு அழுதுட்டு இருந்ததைப் பார்த்த ஒரு அம்மா... 'எங்கூட மெட்ராசுக்கு வர்றியா?'னு கேட்டப்போ, சட்டுனு டிரெயின் ஏறிட்டேன் வீட்டுல சொல்லாமலே'' என்றவரை, மதராசப்பட்டினம்தான் அடைக்கலப்படுத்தி இருக்கிறது.


''ஆயிரம் விளக்கு பகுதியில ஒரு வீட்டுல வேலைக்குச் சேர்த்து விட்டாங்க அந்தம்மா. அப்போதான் ஜெமினி ஸ்டூடியோவுல வேலைக்கு ஆள் எடுக்கறாங்கனு பரவலா பேசிக்கவே, ஸ்டூடியோவுக்குப் போனேன். அங்க இருந்த வெங்கட்ராம அய்யர், 'உனக்கு என்ன தெரியும்?'னு கேட்டாரு. 'நல்லா நீச்சலடிப்பேன். கும்மி, கோலாட்டம் ஆடுவேன்'னு சொன்னேன். என்ன நெனச்சாரோ, வேலைக்கு சேர்த்துக்கிட்டாரு. மாசம் 60 ரூபாய் சம்பளம். 1948-ல வந்த 'சந்திரலேகா' படத்துல, பிரமாண்ட டிரம் பாட்டு செம ஃபேமஸ். அதுல மூணாவது டிரம்ல நானும் ஆடியிருப்பேன்'' என்று பெருமிதத்தோடு சொன்னவர்,

''பதினெட்டு வயசு பெண்ணுக்கு என்னவெல்லாம் ஆசைஇருக்குமோ, அது எதுவுமே அப்ப எனக்கு இல்ல. நிறைய சம்பாதிக்கணுங்கற நெனப்புதான் இருந்துச்சு. நாடகங்கள்ல நடிச்சேன். 'தாமரைக்குளம்', 'சர்வர் சுந்தரம்'னு படங்கள்லயும் வாய்ப்புகள் கிடைச்சது. நிஜத்துல பூனையைப் பார்த்தாகூட பயப்படறவ நான். ஆனா, 'பாக்தாத் திருடன்' படத்துல குழந்தையைக் காப்பாத்தறதுக்காக நிஜ புலிகூட சண்டை போட்டேன். எம்.ஜி.ஆரே வியந்து பாராட்டினாரு'' என திரையுலக ஆச்சர்யங்களுக்கு நடுவே, தன் குடும்பத்தையும் சந்தித்திருக்கிறார்.

''எட்டு வருஷம் கழிச்சு என் அம்மா, உடன் பிறந்தவங்களைப் பார்க்க ஆசையோட, அழுகையோட போனேன். என்னைக் கட்டிப் பிடிச்சு கதறிட்டாங்க எங்கம்மா. எனக்கும் வரன் பார்த்தாங்க. ஆனா, அதுல நான் விருப்பம் காட்டல. 'செல்வி லட்சுமி'யாவே இருந்துட்டேன்'' என்றவர்,

''கூடபொறந்த பன்னிரண்டு பேரும் மேல போயிச் சேர்ந்துட்டாங்க. இப்போ அவங்க பிள்ளைங்க, பேரன், பேத்திங்கனு எல்லாருக்கும் மிச்சமிருக்கற ஒரே ஜீவன் நான்தான். ஒரு காலத்துல வறுமைக்குப் பயந்து வீட்டை விட்டு ஓடிட்டாலும், தொடர்ந்து ஒரு ஆலமரமா அவங்களை எல்லாம் தாங்கின... தாங்கிக்கிட்டிருக்கற திருப்தி இருக்கு எங்கிட்ட!'' என்றபோது, லட்சுமியின் வார்த்தைகளில் நெகிழ்ச்சியின் ஈரம்!

தொடர்ந்தவர், திரையுலக அனுபவங்களால், சூழலை கலகலப்பாக்கினார். '' 'தொழிலாளி' படத்துல எம்.ஜி.ஆருக்கு அம்மாவா நடிச்சேன். அதுல எம்.ஜி.ஆர். என் காலை பிடிக்கற மாதிரி ஒரு ஸீன் வரும். அவர் கால்ல விழும்போது நான் தள்ளிப் போயிட, 'என்னை உங்க புள்ளையா நினைச்சுக்கோங்க'னு சொன்னதோட, அங்க இருந்த ஸ்டில் கேமராமேன் நாகராஜ ராவைக் கூப்பிட்டு, 'போட்டோ எடுங்க'னு சொல்லி, அதை எனக்கு கொடுத்தும் அனுப்பினாரு. எம்.ஜி.ஆர்... பாசத்துல பிதாமகன்! நடிகர் திலகம் சிவாஜிகூட நடிக்கும்போது, 'நீங்க நின்னீங்கனா எனக்குதான் கால் வலிக்கும். உட்காருங்கம்மா'னு சேரை இழுத்துப் போடுவாரு.!




ஜெயலலிதா, ஸ்டூடியோவுல யாரையும் அனுமதிக்காத தன்னோட அறையில, 'நீங்க இங்கயே டிரெஸ், மேக்கப் பண்ணிக்கோங்கம்மா'னு சொன்ன அவங்களோட அக்கறைய இன்னும் என்னால மறக்க முடியல. சரோஜாதேவி, விஜயகுமாரி, வாணிஸ்ரீ, சௌகார் ஜானகி, கே.ஆர்.விஜயா எல்லாம் இப்பவரைக்கும் என் மேல பாசத்தைப் பொழியற அன்பு செல்லங்க. ரஜினி, கமலஹாசன்னு இன்னிக்கு இருக்கற தலைமுறையும் என்கிட்ட பாசமாவே இருக்கறாங்க!'' என்று சினிமா பேசிய லட்சுமி,

''சினிமாவுல என் அறிமுகம் எஸ்.எஸ். வாசனோட 'சந்திரலேகா'... சீரியல் அறிமுகம் விகடன் டெலிவிஸ்டாஸோட 'தென்றல்'! அப்புறம் 'முந்தானை முடிச்சு' (சன்.டி.வி.), 'உறவுக்கு கை கொடுப்போம்' (கலைஞர் டி.வி.)னு ஓடிட்டேயிருக்கேன்'' என்ற லட்சுமி,

''இன்னிக்கு ஞாயித்துக்கிழமையில்ல... டிரைவரை வரச் சொல்லி, சாய் கிருபா மெடிக்கல் சென்டருக்குப் போகணும். ஏழைப் பிள்ளைங்களுக்கு என்னால ஆன உதவியை செஞ்சுட்டு இருக்கேன்!''

- விடை பெற்றுச் சென்ற அந்த வயோதிக உருவம், நம்மை நெகிழ்ச்சியில் நிறைத்தது!

Monday, October 25, 2010

மயக்கும் அழகுக்கு 'மட் தெரபி'!


"ஃபேர்னெஸ் க்ரீம், ஃபேஷியல் கிரீம்னு கிலோ கணக்குல கிரீம்களையும், ஆயிரக்கணக்குல பணத்தையும் செலவழிக்கறதுக்கு பதிலா, இதுல நல்ல ரிசல்ட் தெரியுது. யெஸ்... இப்போ நான், என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் 'மட் தெரபி'க்கு மாறிட்டோம். ஜஸ்ட் ட்ரை இட் யா!"னு மதுரை காலேஜ் பொண்ணு ப்ரியா நமக்கு மெஸேஜ்ஜினாங்க.

'மண்ணுல தெரபியா..? ஒரு மண்ணும் புரியலயே மக்கா!'னு முழிச்ச நமக்கு, "களிமண், ஒரு பியூட்டி க்ரீம்!"னு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சாங்க மதுரையில 'டாக்டர் நேச்சர் ஹெல்த் கேர் கிளினிக்' நடத்தற நேச்சுரோபதி டாக்டர் கமர்நாஸ்.


"கிராமத்து திருவிழாக்கள்ல சேத்து மண்ணை உடம்புல பூசிட்டு ஆடறதைப் பார்த்திருப்பீங்க. பங்குனி, சித்திரை மாதங்கள்ல வெயிலோட உக்கிரத்தை தணிச்சுக்கத்தான் உடம்புல அப்படி மண்ணை பூசிக்கற வழிபாட்டு முறையை பெரியவங்க உருவாக்கியிருக்காங்க. அதுதான் இப்போ 'மட் தெரபி'!"னு சிம்பிளா புரிய வெச்ச கமர்நாஸ், மட் தெரபிக்காக பயன்படுத்தற மண்ணோட தன்மை பத்தி தொடர்ந்தாங்க...

"மனிதர்களால அதிகம் பயன்படுத்தப்படாத ஆற்றங்கரைகள், கழிமுகத் துவாரங்கள்னு நீர்நிலைப் பகுதிகள்ல ஐந்தடி ஆழம் தோண்டினதுக்கு அப்பறம் கிடைக்கற நல்ல களிமண்தான், மட் தெரபி செய்யறதுக்கு ஏற்ற மண். அதை 48 மணி நேரம் வெயில்ல காய வெச்சு, சலிச்சு, மண்பானை தண்ணியில ஒரு நாள் முழுக்க ஊற வெச்சு தயார்படுத்தினா... 'மட் க்ரீம்' ரெடி!"னு நம்மகிட்ட காண்பிச்சாங்க கமர்நாஸ். 'டயரி மில்க் சாக்லேட்' மாதிரி அவ்ளோ நைஸா இருந்தது களிமண்!

"இப்போ ஸ்டெப்ஸ் ஆரம்பம்"னு ப்ரியாவை உக்கார வெச்சு, ஒரு மினி டெமோ செஞ்சுட்டே... நம்மகிட்ட பேசின கமர்நாஸ்,

"மட் க்ரீமை, 'மஸ்லின் கிளாத்'ல வெச்சுக் கட்டி, முகம், உடம்பு, வயிறுனு தேவைப்படற இடங்கள்ல ஒத்தடம் கொடுக்கலாம். இல்லனா... நேரடியாவும் பூசலாம். முகத்துல பூசினா... 15 நிமிஷங்கள் கழிச்சும், உடம்புல பூசினா... ஒரு மணி நேரம் கழிச்சும் வெறுமனே தண்ணியில கழுவினா போதும். ஃப்ரெஷ்னஸ் கியாரன்ட்டி!"னு சொன்னவங்க,

"முகத்துல இருக்கற பரு, கரும்புள்ளி, கண்ணைச் சுத்தி இருக்கற கருவளையம்னு எல்லாம் ஆல் க்ளியர் ஆகிடும். கம்ப்யூட்டர்ல வேலை பார்க்கறவங்க இதைத் தினமும் செய்து வந்தா, கண் எரிச்சலை போக்கி குளிச்சியைத் தரும். தலையில தேய்க்கும்போது, பொடுகுத்தொல்லை குறையும். கை, கால்கள்ல தேய்க்கும்போது சருமம் மென்மையாகும்"னு அடிச்சு சொன்னாங்க.

தொடர்ந்து பேசினவங்க, "பொதுவா கெமிக்கல் பியூட்டி க்ரீம்கள், சருமத்தோட மேல் அடுக்குல மட்டும்தான் வேலை செய்யும். இந்தக் மட் க்ரீம்... இன்னும் ஊடுருவி, உடம்போட வெப்பத்தையும் குறைக்கும். குளிர்ச்சி நரம்புகளத் தூண்டிவிட்டு, ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தி, மூளையை சுறுசுறுப்பாக்கும். வயிற்றுப் பகுதியில அப்ளை செய்யுறப்ப... வயிற்று வலி, ஜீரணக்கோளாறு, மலச்சிக்கல், சிறுகுடல் பிரச்னைகள் நீங்கும். ஸ்ட்ரெஸ் பாதிப்பை நீக்குற சக்தியும் இதுக்கு உண்டு!"னு உத்தரவாதங்களை அடுக்கின கமர்நாஸ்,

"உடல், தலைனு புண் உள்ளவங்க... சைனஸ், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்னை உள்ளவங்க... இந்த சிகிச்சை யைத் தவிர்க்கணும்"னு எச்சரிக்கையைக் கொடுக்கவும் தவறல.

சரி, இந்த நேச்சுரோபதியில இவங்களுக்கு எப்படி இன்ட்ரஸ்ட்?

"சின்ன வயசுல, எங்க அப்பா சரும நோயால பாதிக்கப்பட்டு, ஆயுர்வேதம், அலோபதினு எந்த வைத்தியத்துக்கும் குணமாகாம அபாய நிலைக்குப் போயிட்டார். நேச்சுரோபதி ட்ரீட்மென்ட் எடுத்ததுக்கு அப்புறம்தான் பிழைச்சார். அதுதான், இயற்கை வைத்தியம் மேல எனக்கு ஆர்வம் ஏற்படக் காரணம்"னு சொல்ற கமர்நாஸ், ஹைதராபாத் உஸ்மானியா யுனிவர்சிட்டியில நேச்சுரோபதி முடிச்சிருக்காங்க.

மதுரை, காந்தி மியூசியத்துல யோகா, அக்குபஞ்சர், மூலிகை வைத்தியம் டிரெயினராவும், கன்சல்டன்ட்டாவும் இருக்கறதோட, இலவசமா வைத்தியமும் செய்யறாங்க.

"இப்போவெல்லாம் பதினஞ்சு வயசுலயே பொண்ணுங்க க்ரீம் போட ஆரம்பிச்சுடறாங்க. அந்த கெமிக்கல்கள் அவங்களோட சருமத்தை சீக்கிரமே முதுமையடைய வெச்சுடும்கறது அவங்களுக்கு தெரியறதும் இல்ல... தெரிஞ்சாலும் அதைப் பெருசா எடுத்துக்கறது இல்ல.அதனால, என்றும் இளமையா இருங்க... இயற்கை முறையிலான அழகுச் சிகிச்சைகளோட!"

- களிமண் கையைக் கழுவிட்டு சிரிக்கறாங்க கமர்நாஸ்!

தமிழ் சினிமாவில் 'மைனா' உருவாக்கும் டிரென்ட்!


தமிழ் சினிமாவில் புதிய படங்களைப் பிரபலப்படுத்தும் யுக்தியில், புதிய டிரென்டை உருவாக்கி வருகிறது, 'மைனா'

பிரபு சாலமன் இயக்கிய திரைப்படம் 'மைனா'. இதை, உதயநிதி ஸ்டாலினுக்கு திரையிட்டு காட்டினார்கள். அப்படம் மிகவும் பிடித்து போகவே 'மைனா'வை வினியோகிப்பது என முடிவு செய்தார் உதயநிதி.

அவரது ரெட் ஜெயண்ட் நிறுவனம் இதுவரை பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய ஹீரோக்களின் படங்களை மட்டுமே வெளியிட்டு வந்தது. 'விண்ணைத்தாண்டி வருவாயா', ' பாஸ் என்கிற பாஸ்கரன்' 'மதராசப்பட்டினம்' போன்ற படங்களை வினியோகித்தது.



'மைனா' ஒரு சிறிய பட்ஜெட் படம். இருந்தாலும், தரத்தில் சிறப்பாக இருக்கிறது எனக் கருதி தனது ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் மூலம் தீபாவளி தினத்தன்று வெளியிடுகிறார்.

முதலில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் பாலா முதலானோருக்கு 'மைனா', சிறப்புத் திரையிடல் மூலம் காண்பிக்கப்பட்டது.

ஆடியோ வெளியீட்டு விழாவில், படத்தை முன்னணி நட்சத்திரங்கள் பலரும் புகழ்ந்து தள்ளினார்கள்.

இதன் தொடர்ச்சியாக வெற்றிமாறன், ஜெகன்நாதன், பாக்யராஜ் உள்ளிட்ட இயக்குனர்களுக்கும் திரையிட்டு காட்டியிருக்கிறார்.

ஒருபுறம் கோடம்பாக்கத்திலேயே 'மவுத் டாக்' வாயிலாக மைனாவின் சிறப்புப் பரவ, அதன் பத்திரிகை கவரேஜ் மூலமாக மறுபுறம் ரசிகர்களிடையேயும் கவனத்தை ஈர்த்திருக்கிறது படம்.

பாலிவுட் உலகில் பின்பற்றப்பட்டும் 'சிறப்புத் திரையிடல்' டிரென்ட் இங்கேயும் நல்ல பலனைத் தரும் என நம்பப்படுவதால், கோடம்பாக்கத்தில் மேலும் சிலரும் இந்த யுக்தியை கடைபிடிக்க இருக்கிறார்களாம்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த 'கோ' படத்தையும் ரெட் ஜெய்ண்ட் வாங்கியிருக்கிறது. அந்நிறுவனத் தயாரிப்பில் கமல் நடிக்கும் 'மன்மதன் அம்பு' படத்தை டிசம்பர் 10 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது இங்கே கூடுதல் தகவல்.

தமிழர்களுக்கு நிச்சயம் நல்லது செய்வேன் : ரஜினியுடன் ஒரு நேர்காணல்


"தமிழர்களுக்கும் தமிழ் சினிமாவுக்கும் நிச்சயம் நல்லது செய்வேன்," என்று இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு அளித்த பேட்டியில் கூறினார், நடிகர் ரஜினிகாந்த்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த தமிழ்நாடு திரைப்பட சங்கத்தின் 40-வது ஆண்டு விழா கலை நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்துடன் இயக்குனர் கே.பாலச்சந்தர் நேர்காணல் கண்டார்.

பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்த அந்நிகழ்ச்சியில், கே.பாலச்சந்தரின் கேள்விகளும், அவற்றுக்கு ரஜினிகாந்த் அளித்த பதில்களும் இதோ...

கேள்வி: "நினைத்துப் பார்க்க முடியாத பெரிய உயரத்தில் இருக்கிறாய். இப்போது மீண்டும் உன்னால் பழைய சிவாஜி ராவாக முடியுமா?"



பதில்: "நான் இன்னும் சிவாஜி ராவாகவே இருப்பதால் தான் ரஜினிகாந்தாக இருக்க முடிகிறது. இந்தப் புகழெல்லாம் சிவாஜி ராவை பாதிக்கவில்லை."

"இன்றைக்கு உன்னால் நினைத்தமாதிரி எங்கும் போக முடியாது. சாதாரண ஒட்டலில் போய் உட்கார்ந்து சாப்பிட முடியாது. நடிகரான பிறகு நிறைய இழந்துட்டோமே என்கிற வருத்தம் உண்டா?"

"சாதாரண மனிதர்களைப் போல எனக்கும் ஓட்டல்களுக்கு சென்று சாப்பிட்டு வர ஆசை உண்டு. அந்த சந்தோஷத்தை இழந்துவிட்டேன். சில நேரங்கள்ல நிம்மதியை இழந்திருக்கிறேன். சூழ்நிலை கைதியாக இருக்க வேண்டியுள்ளது. இவற்றைத் தியாகம் செய்துதான் இந்தப் புகழை அடைந்திருக்கிறேன்."

"வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக எழுதலாமே..?"

"சுயசரிதை எழுதினால் உண்மைகளை மறைக்காமல் அதில் குறிப்பிடவேண்டும். நான் உண்மைகளை அப்படியே எழுதினால் நிறைய பேர் மனசு கஷ்டப்படும். மகாத்மா காந்தியிடம் சுயசரிதை எழுதுவதற்கு தைரியம் இருந்தது. அந்தத் தைரியம் எனக்கும் வரும்போது எழுதுவேன்."

"உன்னைத் தூக்கி வைத்துள்ள தமிழ் சினிமாவுக்கு, தமிழ் மக்களுக்கும என்ன செய்யப் போகிறாய்?

"நிச்சயம் நல்லது செய்வேன். தமிழர்களும், தமிழ் சினிமாவும் பெருமைப்படுகிற மாதிரி ஒன்றை நிச்சயம் செய்வேன்."

"இன்றைக்கு நீயே இந்தியாவின் உச்ச நட்சத்திரம். வட இந்திய மீடியாவும் சொல்கிறது. இந்த நிலையை தக்க வைக்க என்ன பண்ணப் போகிறாய்?

"இதை எதிர்ப்பார்த்து நான் எதையும் செய்யவில்லை. அதனால், காப்பாற்றிக் கொள்ளவும் முயற்சி செய்யவில்லை. நான், என் வேலையை செய்துகொண்டு இருக்கிறேன். இப்போது இருக்கின்ற நிலை, ஒரு எந்திரனால் மட்டும் வந்ததில்லை. அதற்கு முன்னால் நான் செய்த நிறைய படங்களும் காரணம். அதேநேரத்தில், இந்த நிலையை எப்படி தக்கவைத்துக் கொள்ளப் போகிறோம் என்கிற பயம் இருக்கவே செய்கிறது."

"சில்வர்ஸ்டர் ஸ்டாலன் போல் ஒரு ஒன் மேன் ஆர்மி நீ. உனது பன்முகப் பரிமாணத்தைக் காட்டும் அளவு படம் எடுக்க இனி யாராலும் முடியாது என்று நினைக்கிறேன். நீயே ஏன் ஒரு படத்தை இயக்கக் கூடாது?"

"படங்களை இயக்குகிற ஐடியா எதுவுமில்லை. அது எனக்குத் தெரியாதது. நிறைய பொறுப்புமிக்கது அது."

"ஒருவேளை படம் இயக்கினால், எனக்கு உதவியாளர் பொறுப்பு கிடைக்குமா?"

"நிச்சயம், உங்களை உட்காரவைத்து வணங்கி, நீங்க சொல்கிற வேலையைச் செய்வேன்."

"இதுவரை நடித்தது எத்தனை படங்கள்?"

"154 படங்களில் நடித்துள்ளேன்."

"இந்தப் படங்களில் நாம நடிக்காம போயிட்டோமேன்னு நினைத்ததுண்டா..?"

"அப்படி ஓரிரு படங்கள் உண்டு."

"என்னென்ன படங்கள் என்று சொல்ல முடியுமா?"

"இல்லை... இப்போது சொல்வது சரியாக இருக்காது. நான் சொல்லவும் விரும்பவில்லை."

"ஐம்பது ஆண்டுகளைத் தாண்டியும் நிற்கிற உனது படங்கள் என்று எதைச் சொல்வாய்?

"ராகவேந்திரா, பாட்ஷா மற்றும் எந்திரன்."

"நீ மிகச் சிறந்த நடிகன். ஆனால், தேசிய விருது கிடைக்கவில்லை என்று ரசிகர்களைப் போலவே எங்களுக்கும் ஏக்கம் உண்டு. எப்போது தேசிய விருது பெறுவாய்?

"அது இயக்குனர் கையில் இருக்கிறது."

"நாடகங்களில் நடிக்க ஆர்வம் உண்டு என பல முறை சொல்லியிருக்கிறாய். இப்போது நாடகங்களில் நடிப்பாயா?"

"கண்டிப்பா நடிப்பேன்."

"மேஜர் சந்திரகாந்த் நாடகத்தை ஏப்ரல் 15 ஆம் தேதி போடப் போகிறேன். அதில் நடிப்பாயா?

"நீங்கள் சொன்னால், நீங்கள் இயக்கினால், நானும் நடிக்கிறேன்."

"ஆரம்ப காலகட்டத்தில் சிகரெட்டை தூக்கிப் போட்டு ஸ்டைல் காட்டினாய். சிகரெட்டும் அதிகமாகப் பிடிப்பாய். இப்போது?

"சிகரெட் பிடிப்பதை இப்போது நிறையவே குறைத்துவிட்டேன்."

"நான் இயக்கியதில் உனக்குப் பிடித்த படங்கள்..?"

"ரெண்டு படங்கள் ரொம்ப பிடிக்கும். 'அவள் ஒரு தொடர்கதை'யை எட்டு முறை பார்த்தேன். 'அரங்கேற்றம்' படத்தை 12 தடவை பார்த்தேன்."

"அரசியலில் பிடித்த தலைவர் யார்?

"லீ குவான் யூ. நவீன சிங்கப்பூரை உருவாக்கியத் தலைவர்."

"வாழ்க்கையில யாரையாவது பார்த்து பொறாமைப்பட்டதுண்டா?"

"இமயமலையில் உள்ள துறவிகளைப் பார்த்து ரொம்ப பொறாமைப்பட்டிருக்கிறேன்."

"உனக்குப் பிடித்த இயக்குனர் யார்? தயங்காமல் சொல்லலாம்"

"மகேந்திரன்."

"விரும்பிச் சாப்பிடும் உணவு?"

"சிக்கன்."

"உனக்கு நெருங்கிய நண்பர் யார்?"

"ராவ்பகதூர்."

"என்கிட்டே உனக்குப் பிடிக்காத விஷயம் எது?"

"நீங்கள் கோபப்படுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்."

"எல்லோரும் கேட்க நினைக்கும் கேள்வி இது. அரசியலுக்கு வருவாயா மாட்டாயா?"

"அது, அந்த ஆண்டவன் கையில் இருக்கிறது!"